Tamil Cinema News | சினிமா செய்திகள்
தலைவா .. என் வாழ்வில் சிறந்த நாட்கள் இவை – கார்த்திக் சுப்புராஜ்.
கார்த்திக் சுப்புராஜ் இன்றைய நெக்ஸ்ட் ஜென் இயக்குனர்களில் முக்கியமானவர். குறும்படம் டு வெள்ளித்திரை என்ற தன் திறமையை நிரூபித்தவர். ஒரு குறிப்பிட்ட ஜானர் என்று இல்லாமல், நிறைய வித்யாசமான முயற்சிகளை எடுப்பவர்.
பேட்ட

petta-movie-rajin
தாடி வைத்து சூட்டில் மாஸ் என்றால், மீசை வைத்து வேஷ்டியில் க்ளாஸாக இருக்கிறார் ரஜினிகாந்த். அதுமட்டுமன்றி சிம்ரன், திரிஷா, விஜய்சேதுபதி, சசிகுமார், நவாஸுதீன் என பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளனர் படத்தில். அனிருத் இசை, திரு ஒளிப்பதிவு, தயாரிப்பு சன் பிக்ச்சர்ஸ் என பிரம்மாண்ட கூட்டணி இது.
இந்நிலையில் பேட்ட பட ஷூட்டிங் முடிந்தது. திட்டமிட்டதற்கு 15 நாள் முன்பே முடிந்தது என்று ரஜினி டீவீட்டினார்.
Thanks thalaivaaaa ? Best days of my life…. Dream come true…. #Petta shoot wrapped… Thanks to the whole team for making this happen…. Still can't believe that I directed a Thalaivar film… All feels like a dream… https://t.co/cFR93QbEMq
— karthik subbaraj (@karthiksubbaraj) October 19, 2018
அதற்கு பதிலில் தான் “நன்றிகள் தலைவா. என் வாழ்வின் சிறந்த நாட்கள். என் கனவு நிறைவேறியது. பேட்ட ஷூட்டிங் முடிந்தது. இதை சாத்தியமாகிய டீமுக்கு என் நன்றிகள். இன்னமும் நம்ப முடியவில்லை நான் தலைவரை இயக்கினேன் என்று .. கனவு போலவே உள்ளது.” என்று கூறியுள்ளார்.
