Tamil Cinema News | சினிமா செய்திகள்
மூன்றாவது முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் கார்த்திக்.. இயக்குனரை நினைச்சா தான் கவலையா இருக்கு!
சத்தமில்லாமல் மிகப்பெரிய வசூல் நாயகனாக மாறி வருகிறார் கார்த்தி. சமீபத்தில் வந்த கைதி படம் 100 கோடி வசூல் செய்து அவரது மார்க்கெட்டை பல மடங்கு உயர்த்தி விட்டது.
அடுத்ததாக வந்த தம்பி படம் ஓரளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஆனால் கைதி அளவுக்கு வசூல் செய்யவில்லை.
இந்நிலையில் கார்த்தி அடுத்ததாக ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். சுல்தான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி வைரல் ஆனது.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார் கார்த்தி. கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஹீரோ என்ற தோல்வி படத்தை கொடுத்த பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார் கார்த்தி. இரட்டை வேடத்தில் நடிப்பது சந்தோஷம் கொடுத்தாலும் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிப்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்துள்ளது.

karthi-cinemapettai
அதற்குக் காரணம் அவஞ்சர்ஸ் ரேஞ்சில் பில்டப் பண்ணி வெளியான ஹீரோ படம் படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும் ஏற்கனவே விஷாலை வைத்து இரும்புத்திரை என்ற வெற்றிப்படத்தை கொடுத்ததால் பிஎஸ் மித்ரனை ஆணித்தரமாக நம்புகிறாராம் கார்த்தி.
