மாமியாவை அலற விட்டு கண்ணம்மா.. 2ம் பாகம் எடுக்காமல் விடமாட்டாங்க போல

விஜய் டிவியின் பிரைன் டைம் சீரியலான பாரதிகண்ணம்மா சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் சீரியலில் பாரதி கண்ணம்மாவை மன்னித்து மனமார ஏற்றுக் கொள்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் மீண்டும் கண்ணம்மாவின் மீது பழியை தூக்கிப் போட்டு சீரியலை பார்க்கும் ரசிகர்களை கடுப்பேற்றி விட்டார்.

கடந்த சில வாரங்களாக ரொமான்ஸ் ஜோடியாக மாறியிருந்த பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் தற்போது கீரியும் பாம்பும் போல மாறிவிட்டனர். மேலும் விவாகரத்துப் பெறுவதற்காக சேர்ந்து வாழ்ந்த பாரதி மற்றும் கண்ணம்மா தற்போது அவரவர் வீட்டில் பிரிந்திருக்கின்றனர்.

இவ்வளவு நாள் கண்ணம்மா வீட்டில் இருந்த பாரதி அவருடைய உடைமைகளை கண்ணம்மா வீட்டிலேயே விட்டு விட்டு சென்றதால் அதையெல்லாம் எடுத்துக் கொண்டு கண்ணம்மா, பாரதியிடம் ஒப்படைக்க சௌந்தர்யா வீட்டிற்கு வந்திருக்கிறார்.

அப்போது சௌந்தர்யா, ‘இதோட எல்லாத்தையும் முடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறாயா?’ என்று கேட்டதற்கு கண்ணம்மா, ‘நான் எந்தத் தவறும் செய்யவில்லை. என்னுடைய குழந்தைக்கு யார் அப்பா என்பதை ஊர் அறிய தெரியப்படுத்துவேன்’ என்று சபதம் விடுக்கிறார்.

இதை பாரதி பின்னால் இருந்த படி கேட்டுக் கொண்டிருக்கிறார். இவ்வாறு விறுவிறுப்புடன் செல்லும் சீரியலில் அதிரடி திருப்பம் வெண்பாவின் சித்தப்பா, பாரதிக்கு போன் செய்து பாரதியின் உடலில் எந்த குறைபாடும் இல்லை என்பதை போட்டு உடைக்க போகிறார்.

இதன்பிறகு எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு பாரதி, கண்ணம்மா முன்பு மன்னிப்பு கேட்கச் சொல்கிறார் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஆகையால் இதுவெல்லாம் சீரியலில் அரங்கேறினால் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் அவர்களது இரு மகள்களுடன் சேர்ந்து வாழ துவங்கிவிடுவர். அத்துடன் இந்த சீரியலில் முதல் பாகம் முடிவடைந்து இரண்டாம் பாகம் தொடங்கப் போவதாகவும் ரசிகர்கள் யூகித்திருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்