கண்டா வரச்சொல்லுங்க.. ஆச்சியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மாரி செல்வராஜ்

சிவகங்கை மாவட்டம் கீழக்கரை என்னும் சின்ன கிராமத்தில் பிறந்தவர் மாரியம்மாள் ஆச்சி. உலகம் முழுவதும் சுற்றி பல பாடல்கள் பாடியுள்ளார். ஆனால் எந்த ஒரு இடத்திலும் இவருக்கான ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை.

கிட்டத்தட்ட 50 வருடங்கள் பாடலை பாடியுள்ள மாரியம்மாஆச்சிக்கு ஒரு கட்டத்திற்கு பிறகு பாடலை பாடுவதை நிறுத்தி விடலாம் என மனதில் தோன்றியுள்ளது. அந்த அளவிற்கு வெறுப்பின் உச்சத்திற்கே சென்றுள்ளார் மாரியம்மாள்.

யாருடைய பின்புலமும் இல்லாமல் 8  வயதிலிருந்து பாடி வருகிறார் மாரியம்மாள். இவர் வீட்டில் பாடிக் கொண்டிருப்பதை கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் கூட அனைவரும் வீட்டிற்கு வந்து பாடலை கேட்பார்களாம்.

kidakkuzhi mariyammal
kidakkuzhi mariyammal

பல நாள் ஏங்கி தவித்த தவிப்பை நிறைவேற்றியது சந்தோஷ் நாராயணன், மாரி செல்வராஜ் தான். எதிர்பாராமல் மாரி செல்வராஜ்டமிருந்து மாரியம்மாள்க்கு போன்கால் வந்துள்ளது. அதன்பிறகுதான் இப்படத்தில் கண்டா வரச்சொல்லுங்க பாடல் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் பரியேறும் பெருமாள் படத்திலிருந்து மாரி செல்வராஜ் திறமை பிடித்ததாம்.  அதனாலதான் இவருடைய படத்தில் பாடுவதற்கு சம்மதித்துள்ளார். தற்போது இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி பலகோடி ரசிகர்களால்பார்க்கப்பட்டு மாரியம்மாள் ஆச்சியை ரசிகர்கள் கொண்டாடினர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்