கமலஹாசனை மிரளவைத்த சத்தியம் தியேட்டர்.. பிறவி பயனை அடைந்த உலகநாயகன்

கடந்த ஒருவாரமாக எங்கு பார்த்தாலும் விக்ரம் படத்தின் பேச்சுகள் தான். இப்படத்தின் புரமோஷனுக்காக கமல் எல்லா நாடுகளுக்கும் சென்று வந்தார். அதற்கான பலனை தற்போது அடைந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அதாவது நேற்று விக்ரம் படம் திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது.

லோகேஷ் இயக்கத்தில் உருவான விக்ரம் படத்தில் கமலஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் கேமியோ தோற்றத்தில் சூர்யாவும் நடித்து இருந்தார். சமீப காலமாக வெளியான படங்களில் இந்த அளவுக்கு எந்த படத்திலும் ஆக்சன் காட்சிகள் இடம்பெறவில்லை.

இந்நிலையில் இதுவரை வெளியான கமல்ஹாசனின் படங்களில் முதல் நாளில் அதிக வசூல் சாதனை படைத்த படம் என்ற சாதனையை விக்ரம்படம் பெற்றுள்ளது. மேலும் அவர் நடித்த படங்களிலேயே அதிக வசூல் செய்யப்போகும் படம் விக்ரம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நேற்று விக்ரம் படத்தின் ரிலீசை முன்னிட்டு கமல் சென்னையில் உள்ள சத்யம் தியேட்டருக்கு சென்று உள்ளார். அங்குள்ள ரசிகர்களைப் பார்த்து கமல் மிரண்ட விட்டாராம். கிட்டத்தட்ட எல்லா பக்கமும் ரசிகர்கள் கூட்டம் ஆர்ப்பரிக்கின்றனராம்.

இப்பேர்ப்பட்ட ஒரு கிராண்ட் ஓபனிங்கை கமல் இதுவரை சந்தித்ததே இல்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும் என் வாழ்நாளில் உன்னதமான நாளாக இன்று உணர்ந்துவிட்டேன் என்று ரசிகர்களிடம் பேசிவிட்டு கமல் சென்றுள்ளார். கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக கமலின் படத்திற்காக காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு இப்படம் பெரும் விருந்தாக அமைந்துள்ளது.

தொடர்ந்து விக்ரம் படத்திற்காக திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இவ்வாறு லோகேஷ் கனகராஜ் தனது அடுத்தடுத்த படத்தின் மூலம் அபரிமிதமான வளர்ச்சி அடைந்து வருகிறார். மேலும் லோகேஷ், கமல் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் வேண்டும் என கமல் ரசிகர்கள் தற்போது கோரிக்கை வைத்துள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்