பாராட்டை ஏத்துக்கிற மாதிரி விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.. ராஜு பாய்க்கு குட்டு வைத்த கமல்

ஒரு புது தெம்போடு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் இதை தான் நாங்கள் எதிர்பார்த்தோம் என்று ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியை நடத்தும் கமல்ஹாசன் போட்டியாளர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் தனித்தனியாக பேசுகிறார். முதலாவதாக ராஜுவை பற்றிய விமர்சனங்களை முன் வைக்கிறார். அதாவது ராஜு தன்னை பிரபலப்படுத்தி கொள்வதற்கு மற்றவர்களை இருட்டடிப்பு செய்து விட்டார் என்று கூறுகிறார்.

ஆண்டவரின் இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பாராத ராஜு வெளிப்படையாகவே அதிர்ச்சி அடைகிறார். ஒருவாராக தன்னை சமாளித்துக் கொண்டு நான் அப்படி செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை என்று கூறுகிறார். அவரை தடுத்து நிறுத்தும் கமல் நான் நடுவரிடம் கேட்கிறேன் என்று சஞ்சீவை நோக்கி கேள்வியை திருப்புகிறார்.

அதற்கு சஞ்சீவ் அவர்களுடைய கான்செப்ட் அவ்வளவாக சரியில்லை, தெளிவாக இல்லை என்று கூறுகிறார். இதற்கு பதிலளித்த ராஜு, டீம் ஒற்றுமையாக இல்லை என்று சமாளிக்கிறார். ராஜுவின் இந்த பதிலுக்கு ஆண்டவர் தன் ஸ்டைலில் பதிலடி கொடுக்கிறார்.

நீங்கள் பாராட்டை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள் அப்பொழுதுதான் உங்கள் மனதிற்கும் ஒரு திருப்தி கிடைக்கும் என்று சொல்கிறார். ஆண்டவரின் இந்த கருத்தால் ராஜு செய்வதறியாது முழிக்கிறார்.

கமலின் இந்த கருத்தை பார்வையாளர்கள் மட்டுமின்றி பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரும் ஆமோதிக்கின்றனர். தரமான நீதி, தரமான விளக்கம் என்று இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை வழிநடத்த உங்களால் மட்டும் தான் முடியும் ஆண்டவரே. எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்ற சொல் இந்த வாரத்திற்கு நன்றாக பொருந்துகிறது

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்