மருதநாயகத்துக்கு இப்படி ஒரு சிக்கலா.. விரக்தியில் ஹீரோவையே மாற்றிய கமல்

பல வருடங்களாக மருதநாயகம் என்ற படத்தின் திரைக்கதையை மெருகேற்றி கடந்த 1997ம் ஆண்டு திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு இந்தப் படத்தை கமல்ஹாசன் தொடங்கினார். குறிப்பாக இதன் தொடக்க விழாவில் ராணி இரண்டாம் எலிசபெத் விருந்தினராக கலந்து கொண்டார்.

அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் மிகவும் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படும் திரைப்படமாக மருதநாயகம் இருந்தது. 80 கோடி பட்ஜெட்டில் பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் இடையில் ஏற்பட்ட சில பிரச்சினையின் காரணமாக இந்த திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

ஆனால் அதற்கு முன்பே இப்படம் சம்பந்தப்பட்ட போட்டோக்களும், வீடியோக்களும் வெளியாகி ரசிகர்களை ஒருவித எதிர்பார்ப்பில் ஆழ்த்தியிருந்தது. முக்கியமாக திரையுலகில் இருக்கும் பலரும் அந்த கமலை பார்த்து மிரண்டு விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த அளவுக்கு மிரட்டலாக இருந்த இந்தப் படம் கைவிடப்பட்டது கமலின் ரசிகர்களுக்கு மிகுந்த வேதனையை கொடுத்தது. இப்படம் மீண்டும் ஆரம்பிக்காத என்ற ஏக்கமும் அவர்களுக்கு இருந்தது. அதற்கு பலனாக தற்போது கமல் இந்தப் படைப்பை தூசி தட்டி எடுக்க இருக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தை எடுப்பதற்காக கமல் பிரபல சோனி பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனால் கூடிய விரைவில் இப்படம் உருவாகும் என்றே தெரிகிறது. இது கமலின் கனவு திரைப்படம் என்பதால் இதை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் அவர் அதற்காக பக்கா ஸ்கெட்ச் போட்டு இருக்கிறார்.

இப்பொழுது கமலுக்கு வயசாயிடுச்சு. அதனால் பழைய மாதிரி இந்த படத்தில் கடின உழைப்பைக் கொடுத்து அவரால் நடிக்க முடியாது. சமீபத்தில் அவர் நடித்த விக்ரம் திரைப்படத்தில் கூட ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் தான் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார்.

இதன் காரணமாக மருதநாயகம் திரைப்படத்தை கமல் இயக்கி வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க திட்டமிட்டு உள்ளார். அது பற்றிய ஆலோசனையில் தான் கமல் தற்போது ஈடுபட்டு வருகிறார். அந்த கேரக்டருக்கு ஆர்யாவை போட்டால் நன்றாக இருக்கும் என்றும், அந்த கேரக்டருக்கு ஏற்ற கட்டுக்கோப்பான உடலுக்கு அவர் தான் பொருத்தமாக இருப்பார் என்று ரசிகர்கள் தற்போது கருத்து கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்