சீசனே முடிய போகுது என்டர்டைன்மென்ட் எங்கைய்யா.. கோமாவிலருந்து முழித்த ஆண்டவரின் அட்ராசிட்டி

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாளை நெருங்கி விட்டது. ஆனால் ஒரு நாள் கூட இந்த நிகழ்ச்சி ஆடியன்ஸை கவரும் வகையில் சுவாரஸ்யமாக இருந்தது கிடையாது. அதற்கு பதிலாக ஒவ்வொருவரும் தங்களுடைய வன்மத்தை தான் கக்கி கொண்டிருக்கின்றனர்.

நிகழ்ச்சியை மக்கள் பார்க்கிறார்கள் என்ற எண்ணம் இல்லாமல் தங்களுடைய சுயரூபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுவே பார்வையாளர்களுக்கு மன உளைச்சலை தருவதாக கமெண்ட்கள் பறந்து கொண்டிருக்கிறது.

இப்படி 70 நாட்களாக நாம் கதறியதை இப்போதுதான் ஆண்டவர் கவனித்திருக்கிறார். அதன்படி கோமாவில் இருந்து முழித்த கதையாக கமல் இன்றைய எபிசோடில் போட்டியாளர்களை சரமாரியாக ரோஸ்ட் செய்திருக்கிறார்.

Also read: தலையாட்டி பொம்மைக்கு சவுக்கடி கொடுத்த ஆண்டவர்.. கதி கலங்கி போனார் கூல் சுரேஷ்

அந்த வகையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சி பொழுதுபோக்காக செல்லவில்லை என்பதை அனைவருக்கும் சுட்டிக் காட்டியுள்ளார். அதிலும் கூல் சுரேஷ் எதிலும் ஆர்வத்துடன் ஈடுபாடு காட்டாமல் இருப்பதையும் கொஞ்சம் ஆக்ரோஷமாகவே கூறியிருக்கிறார்.

சினிமாவுல சாதிக்கணும்னா இந்த பொழுதுபோக்கு பத்தாது. நீங்கல்லாம் வெளில போயி கைக்கு கிடைச்ச வேலையைத்தான் பார்க்கப் போறீங்களா? சாதிக்கணும்னு ஆசை கிடையாதா? என அவர் சரமாரியாக வெளுத்து வாங்கி இருக்கிறார். அதுதான் இன்றைய எபிசோடில் வர இருக்கிறது.

நேற்றைய எபிசோடில் நிக்சன், அர்ச்சனா, மணி, தினேஷ் என அனைவரையும் ஆண்டவர் கேள்வி கேட்டு கதறவிட்டார். அதை தொடர்ந்து இன்றைய எபிசோடில் கூல் சுரேஷ் உள்ளிட்ட சிலருக்கு அர்ச்சனை காத்திருக்கிறது. ஆனாலும் கடந்த சில வாரங்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யம் இல்லாததால் பார்வையாளர்களும் குறைந்து விட்டனர் என்பது தான் உண்மை.

Also read: நிக்சனுக்கு எதிராக அர்ச்சனா கையில் எடுத்த ஆயுதம்.. குள்ளநரித்தனத்தை தோலுரித்த ஆண்டவர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்