என்கூட வாழனும்னா நீங்க மதம் மாறணும்.. கமலை கட்டுக்குள் வைத்திருந்த நடிகை

நடிகர் கமல்ஹாசனின் சினிமா வாழ்க்கையிலும் சரி, சொந்த வாழ்க்கையிலும் சரி, நிறைய காதல் கிசுகிசுக்கள், திருமணங்கள், விவாகரத்து என பல விஷயங்கள் நடந்து விட்டது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அவரது சொந்த வாழ்க்கையும் சினிமா வாழ்க்கை போல்தான் இருக்கிறது.

நடிகர் கமல்ஹாசனின் முதல் மனைவி வாணி கணபதி. சிலகாலம் அவருடன் குடும்பம் நடத்திய கமலஹாசன் பிரபல பாலிவுட் நடிகை சரிகா என்பவருடன் ஏற்பட்ட காதல் காரணமாக வாணி கணபதியை விவாகரத்து செய்ததாக அப்போதே பல பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அது உண்மைதான் எனும் அளவுக்கு ஒரு பயங்கர குண்டை தூக்கிப் போட்டுள்ளார் பிரபலமும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன். கமலஹாசன் எப்போது ஹிந்தி சினிமாவுக்கு சென்றாரோ அப்போது அவருடைய நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது எனக் கூறியுள்ளார்.

அதற்கு முழுக்க முழுக்க காரணம் அவருடைய காதல் மனைவி சரிகா தானாம். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ரகசியமாக வாழ்ந்து வந்தனர், அதனால் ஏற்பட்ட கரு காரணமாகத்தான் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சரிகாவை திருமணம் செய்ய வேண்டுமென்றால் கமலஹாசன் மதம் மாற வேண்டும் என்று கண்டிஷன் போட்டாராம் சரிகா. அதற்கும் ஓகே சொல்லி கமல்ஹாசன் இஸ்லாமிய மதத்திற்கு மாறி தான் சரிகாவை திருமணம் செய்து கொண்டார் என்கிறார் பயில்வான்.

ஆனால் உண்மையில் சரிகா முஸ்லிம் இல்லை எனவும், கமல் மதம் மாற வேண்டிய அவசியமே இல்லை எனவும் கூறுகின்றனர். ஆனால் எதற்காக பயில்வான் ரங்கநாதன் இப்படி ஒரு பொய்யை சொல்லுகிறார்? என பலரும் செம கடுப்பில் இருக்கிறார்களாம்.

actress-sarikaa-cinemapettai
actress-sarikaa-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்