திருமணத்திற்கு பின் பக்தியில் முத்திப் போன காஜல் அகர்வால்.. வைரலாகும் புகைப்படம்.!

தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகும் கைவசம் அதிக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் வெளியான படம் கோமாளி. அதன்பின் தமிழில் இவருக்கு இந்தப்படமும் வெளியாகவில்லை.

எப்போதுமே ஹிந்தி நடிகைகளுக்கு வாழ்க்கை தருவது என்னமோ தென்னிந்திய சினிமா தான். அப்படி ராஜமௌலி இயக்கிய மகதீரா என்ற படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பேசப்படும் நடிகையாக மாறினார் காஜல் அகர்வால்.

அதன் பிறகு எல்லாமே ஏறுமுகம்தான். அதுவும் தமிழில் விஜய்யுடன் நடித்த துப்பாக்கி படத்திற்கு பிறகு தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். மேலும் தென்னிந்திய சினிமாவில் பல நடிகைகள் வந்தாலும் தன்னுடைய இடத்தை நிரந்தரமாக வைத்துக் கொண்டார்.

அந்த வகையில் தற்போது முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் மூத்த நடிகர்களின் படங்களிலும் முதல் சாய்ஸ் இவர்தான். இப்படி கல்யாணத்திற்கு பிறகு சினிமா மார்க்கெட் அதிகம் உள்ள நடிகைகளில் குறிப்பிடவேண்டிய ஒருவராக மாறி உள்ளார்.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் இன்று கிருஷ்ண ஜெயந்தி என்பதால் அவரின் வீட்டில் கிருஷ்ணன் மற்றும் ராதாவை வைத்து கிருஷ்ணா ஜெயந்தியை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படத்தையும் சமூக வலைதங்களில் பகிர்ந்துள்ளார்.

kajal-aggarwal
kajal-aggarwal

அதில் ‘உங்களுக்கு ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி வாழ்த்துக்கள்’ என ஹிந்தியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த படம் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகப்பேரால் பகிரப்பட்டு வருகிறது.

kajal-aggarwal
kajal-aggarwal
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்