30 கோடி நஷ்டமடைந்த விஜய் படம்.. சர்ச்சையை கிளப்பும் ப்ளூ சட்டை மாறன்

தமிழ் சினிமாவின் தயாரிப்பாளரும், பல படங்களை இயக்கிய இயக்குனராகவும் அறியப்பட கூடியவர் கே.ராஜன் அவர்கள். அவர் பல சமயங்களில் நேர்காணலிலும், மேடைப் பேச்சுகளிலும் பேசும் பேச்சுக்கள் பெரும் சர்ச்சையாகி விடுகின்றன. அப்படி ஒரு தயாரிப்பாளர் மனதில் இருக்கக்கூடிய அத்தனை குமுறல்களையும் வெளியில் எந்தவிதமான தயக்கமும் இன்றி சொல்லக் கூடியவர்.

அப்படிப்பட்ட கே. ராஜன் சமீபத்தில் ஒரு பொதுவெளியில் பேசிய பேச்சு, தற்போது சமூக வலைதளங்களின் பேசு பொருளாக மாறியிருக்கிறது. இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன் அவர்கள் பிகில் படத்தால் 30 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும், இதற்கு முக்கிய காரணம் பெரிய ஹீரோக்கள் வாங்கும் சம்பளம் தான் என்றும் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.

நூறு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கக்கூடிய பெரிய நடிகர்கள் அதனை எங்கே பதுக்கி வைத்து இருக்கிறீர்கள்..? ஹீரோக்கள் எல்லாம் தயாரிப்பாளர்களின் ரத்தத்தை உருஞ்சுகிறார்கள் என்று அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

நீங்கள் படத்தில் பந்தா காட்டாமல் அடக்கமாக நடிக்க வேண்டும் என்றும் அவர் கூறியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது முதல்முறை அல்ல இது போன்று பல முறை ராஜன் அவர்கள் பொதுவெளியில் தயாரிப்பாளர்கள் படும் இன்னல்கள் குறித்தும் , அவர்களின் படம் நஷ்டம் ஏற்பட்டால் அவர்கள் படக்கூடிய துயரங்கள் குறித்து வெளிப்படையாக பேசி இருந்தார்.

ஆனால் இந்த தகவலை சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதனை டிவீட் செய்து இருக்கிறார். இதற்கு முன் அஜித்தின் வலிமை திரைப்படத்தை பார்த்துவிட்டு இவர் கூறிய விமர்சனம் மற்றும் அதன் பின் அஜித்தை தனிப்பட்ட முறையில் இவர் தாக்கிப் பேசிய விவகாரம் என்று ப்ளூ சட்டை மாறன் பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கும் போது, தற்போது தளபதி விஜய்யையும் வம்புக்கு இழுத்து கொண்டிருக்கிறார். இது தேவையா உங்களுக்கு என்று பலரும் சமூக வலைதளங்களில் இந்த தகவலை வேகமாக பரப்பி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்