ஜோதிகாவுடன் கிசுகிசுக்கப்பட்ட 3 பிரபலங்கள்.. அந்த ஸ்டைலிஷ் இயக்குனரை ஜெயித்து காட்டிய சூர்யா

சூர்யா, ஜோதிகா இன்று காதல் ஜோடிகளுக்கு மிக முக்கியமான எடுத்துக்காட்டாக இருப்பவர்கள். முதல் படத்திலேயே இவர்கள் காதலை வளர்த்து அதை கடைசி வரை காப்பாற்றி இன்று நல்ல ஜோடியாக வலம் வருகிறார்கள். இருந்தாலும் ஜோதிகாவின் முன்னாள் காதலர்கள் யார் என்று இதில் பார்க்கலாம்.

ஜோதிகா நடிக்க வந்த முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்தார் காரணம் இவரது நடிப்பு மற்றும் குறும்பு தனமான அந்த சேட்டைகளும் மக்களிடம் சென்றடைந்தன. அதனால் அனைத்து நடிகர்களும் இவருடன் நடிக்க ஆசைப்பட்டனர், அஜித்துடன் வாலி படத்தில் நடித்த ஜோதிகா தொடர்ந்து பல படங்கள் நடித்து வெற்றி ஜோடியாக வெற்றி பெற்றனர்.

சிம்புவுடன் ஜோதிகா 4 வயது பெரியவர் அப்படியிருக்க மன்மதன் திரைப்படத்தில் சேர்ந்து நடித்தார். சிம்புக்கு ஜோதிகாவை ரொம்ப பிடிக்கும் அந்த காரணத்தால் நடிக்க வைத்தார். அந்த சமயத்தில் சில வீடியோக்களும் கிசுகிசுக்கள் வந்தன, அடுத்து சரவணன் என்ற திரைப்படத்திலும் நடித்தனர். இந்த கிசுகிசு உண்மையாக பேசப்பட்டன.

தூள் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்த ஜோதிகா. படம் சூப்பர் டூப்பர் ஹிட் பொதுவாக விக்ரம் எல்லா கதாநாயகிகளும் நன்றாக பழகக்கூடியவர். ஆகையால் இவர்களுக்குள்ளும் சில கிசுகிசுக்கள் வந்தன. அதனை உண்மை என கூறும் வகையில் அடுத்த படம் அருள் படத்தில் நடித்தனர்.

இதற்கிடையில் கௌதம் மேனன் கூட காக்க காக்க சமயத்தில் ஜோதிகாவை ஒருதலையாக காதலித்து வந்தார் என்று செய்திகள் வெளிவந்தன. கௌதம் மேனன் வெளிக்காட்டவில்லை காரணம் சூர்யா ஜோதிகா இருவரும் காதலித்து வந்ததினால்.

சூர்யா- ஜோதிகா திருமணத்திற்கு கூட சிம்பு, விக்ரம் அழைக்கப்படவில்லை என்று சில வதந்திகள் கூட அந்த சமயத்தில் வந்தன. காரணம் இருவர் மீது சூர்யா கோபத்தில் இருப்பதனாலும் என்று கூறப்பட்டன. என்னதான் பல கிசுகிசுக்கள் வந்தாலும் தன் காதல் உண்மையான நிரூபித்து இன்று சமூக கருத்துக்கள் அரசியல்ரீதியான கருத்துக்கள் மக்களுக்கு உதவி செய்தல் போன்ற நல்ல விஷயங்களில் இவர்கள் ஈடுபடுவதால் அனைத்தும் மறைந்து விடும்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →