ஜூலியை ஏமாற்றிய காதலன்.. அவரிடம் இருந்து என்னென்ன பறித்துள்ளார் தெரியுமா?

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கோஷமிட்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் ஜூலி. இதன்மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. ஜூலி பிக் பாஸ் வீட்டில் பேசு பொருளுக்கு ஆளானார். இதனால் நெட்டிசன்கள் இவரை அதிகம் கிண்டல் செய்து வந்தார்கள்.

ஜூலி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி பல படங்களில் நடித்து வந்தார். சின்னத்திரை தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார். பின்பு ஜூலி மாடலிங் பிஸியாக இருந்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி நிறைய போட்டோ ஷூட் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவார். இதற்கிடையே விளம்பரங்களிலும் நடித்து படு பிஸியாக இருந்தார்.

ஜூலி கடந்த 2017 இல் இருந்து மனிஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். தற்போது ஜூலி அவரது காதலர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஜூலி நேற்று அண்ணா நகர் காவல் நிலையத்தில், அண்ணாநகரில் உள்ள தனியார் சலூன் கடையில் பணியாற்றி வரும் மனிஷ், கடந்த நான்கு ஆண்டுகளாக தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பணம், நகையை பெற்றுள்ளார்.

மனிஷ் பணம், நகைகளை வாங்கிக் கொண்டு தற்போது மதத்தை காரணம் காட்டி பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என மறுப்பு தெரிவிக்கிறார் என மனிஷ் மீது ஜூலி மோசடி புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஜூலியன் காதலன் மனிஷை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது இருவரும் சமாதானம் ஆகி விட்டார்கள் என கூறப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்