ஜோதிகாவுடன் ஜோடி சேர மறுத்த விஜய் சேதுபதி.. வாய்ப்பை தட்டிப் தூக்கிய இளம் ஹீரோ

இந்த வருடம் ஆரம்பமானது முதலில் இருந்தே தமிழ் சினிமாவில் ஹிட் கொடுக்கக்கூடிய திரைப்படங்கள் இன்னும் வெளியாகாமல் ரசிகர்களிடம் அதிருப்தியை பெற்று வருகிறது. தல அஜித், தளபதி விஜய் உள்ளிட்டோரின் பீஸ்ட், வலிமை உள்ளிட்ட திரைப்படங்கள் தோல்வியை தழுவிய நிலையில், ரசிகர்கள் மிகப்பெரிய அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இதனிடையே தற்போது விஜய்சேதுபதி தான் நடிக்கப் போகும் திரைப்படங்களின் கதைகளை துல்லியமாக கவனித்து வருகிறார். இதேபோல நடிகை ஜோதிகாவும் தற்போது பல திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகி வரும் நிலையில் நிலையில் சமீபத்தில் பிரபல இயக்குனரின் கதையை கேட்ட இருவரும் நடிக்க மறுத்து உள்ளனர்.

தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமந்தா, நயன்தாரா, உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுக்காவிட்டாலும் கமர்சியல் ரீதியாக ரசிகர்களிடம் நல்ல பெயரை பெற்றுள்ளது.

இதனிடையே தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ள விக்ரம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை அடுத்து இடம் பொருள் ஏவல், மாமனிதன் உள்ளிட்ட வரிசையான திரைப்படங்கள் விஜய்சேதுபதியின் கையில் உள்ள நிலையில் பிரபல நடிகை ஜோதிகாவுடன் நடிக்க மறுத்துள்ளார்.

நடிகை ஜோதிகா தற்போது பல திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில், பெண்களுக்கு முக்கியமான கதை அம்சமுள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகரும் ஜோதிகாவின் கணவருமான சூர்யாவின் நடிப்பில் சூர்யா 41 திரைப்படத்தில் ஜோதிகா நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட திரைப்படங்களில் ஜோடியாக நடித்த சூர்யாவும் ஜோதிகாவும், தற்போது திருமணத்திற்குப் பின்னால் ஜோடியாக நடிக்கப்போகும் படம் இதுவே ஆகும்.

இதனிடையே இயக்குநர் ஏஆர் முருகதாஸின் சிஷ்யனான இயக்குனர் சரவணன் எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர். இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ஜோதிகாவிற்கு ஏற்றார்போல ஒரு அழகான கிராம கதையை மையமாகக் கொண்டு படத்தை இயக்கலாம் என்று முடிவு செய்திருந்தார். இத்திரைப்படத்தின் கதையை கேட்ட ஜோதிகாவும், விஜய் சேதுபதியும் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்களாம்.

தற்போது இவர்கள் இருவரும் பல திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், இயக்குனர் சரவணன் இயக்கத்தில் நடிப்பதற்கான கால்ஷீட் இவர்கள் இருவரிடமும் இல்லையாம். இதனால் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிகர் கதிரை வைத்து இத்திரைப்படத்தை இயக்க உள்ளாராம் சரவணன். பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்த நடிகர் கதிர் தளபதி விஜய்யின் பிகில் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின்னர் இவர் நடித்த, பல திரைப்படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது சரவணன் இயக்க இருக்கும் இத்திரைப்படம் இவருக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்