ட்ரெண்டை மாற்றும் ஜெயம் ரவி..கை கொடுக்குமா புதிய முயற்சி

தமிழில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. அதன்பிறகு அவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் பரவலான வெற்றியை பெற்று வந்தது.

ஜெயம் ரவி தன் அண்ணன் ராஜா இயக்கத்தில் பல ரீமேக் படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு பேராண்மை, நிமிர்ந்து நில், எங்கேயும் காதல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்தார்.

இந்த படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் அவ்வளவாக வசூலை பெறவில்லை. இதன் காரணமாக ஜெயம் ரவி எவ்வளவு திறமையாக நடித்தாலும் பல படங்கள் தோல்வியை தழுவியது.

இறுதியாக அவர் நடிப்பில் வெளிவந்த பூமி திரைப்படம் மக்கள் பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. இந்த படம் ஜெயம் ரவிக்கு இருபத்தி ஐந்தாவது திரைப்படமாகும். அவர் இப்படத்தை மிகவும் எதிர்பார்த்த நிலையில் இப்படமும் சரியாக ஓடவில்லை.

இதனால் என்ன செய்வது என்று யோசித்த அவர் தற்போது தனது ட்ரெண்டை மாற்றியுள்ளார். அதாவது ஜெயம் ரவி தற்போது காமெடி கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார். இதற்காக அவர் இயக்குனர் ராஜேஷை கூப்பிட்டு தனக்கு ஒரு கதை தயார் செய்யுமாறு கூறி இருக்கிறார்.

சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் ராஜேஷ். அதைத்தொடர்ந்து பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற திரைப்படங்களில் தன்னுடைய காமெடியின் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

காமெடி கதைகளில் கலக்கி வரும் இயக்குனர் ராஜேஷை தான் தற்போது ஜெயம் ரவி நம்பியிருக்கிறார். இந்த கதையின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கு ஒரு நல்ல இடம் கிடைக்கும் என்று அவர் எதிர்பார்க்கிறார். அவர்கள் இருவரும் இணையும் திரைப்படத்தைப் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்