வசூல் வேட்டையாடும் டைகர் முத்துவேல் பாண்டியன்.. மிரள வைக்கும் 3வது வார ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Jailer Box Office Report: சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் வெளியாகி மூன்று வாரங்கள் கடந்த பிறகும் கூட அதன் தாக்கம் இன்னும் ரசிகர்களிடம் குறையாமல் இருக்கிறது. சன் பிக்சர்ஸ் கூட்டணியில் சூப்பர் ஸ்டார் இதற்கு முன்பாக சில படங்கள் நடித்திருந்தாலும் இந்த அளவுக்கு பாக்ஸ் ஆபிஸை திணற வைத்தது ஜெயிலர் மட்டும்தான்.

அந்த வகையில் தற்போது பல மடங்கு லாபத்தை பார்த்து வரும் கலாநிதி மாறன் உச்சகட்ட சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறாராம். அதன் காரணமாகவே விரைவில் சூப்பர் ஸ்டாரை வைத்து மற்றொரு பிரம்மாண்ட படத்தை தயாரிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

Also read: ஜெயிலர் கொடுத்த உத்வேகம்.. ரஜினிக்கு வரிசைகட்டி நிற்கும் 3 படங்கள்

இந்நிலையில் தமிழ்நாட்டில் மட்டுமே ஜெயிலர் பல கோடிகளை வாரி குவித்து கெத்து காட்டிக் கொண்டிருக்கிறது. அதன்படி முதல் வார முடிவில் 159 கோடிகளை வசூலித்திருந்த ஜெயிலர் இரண்டாவது வார முடிவில் 42.83 கோடிகளையும் வசூலித்திருந்தது.

அதைத்தொடர்ந்து மூன்றாவது வாரத்திலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில் மூன்றாவது வாரத்தில் இதன் வசூல் 22 கோடிகளை நெருங்கி இருக்கிறது. இதை வைத்து பார்க்கும் பொழுது ஜெயிலர் தமிழ்நாட்டில் மட்டுமே 224 கோடி வரை வசூலித்துள்ளது.

Also read: ஜெயிலர் ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய முன்னணி நிறுவனம்.. 600 கோடி வசூலை பார்த்ததும் ஜர்க் அடிச்ச சன் பிக்சர்ஸ்

இது நிச்சயம் பலரையும் மிரள வைக்கும் சம்பவம் தான். அது மட்டுமல்லாமல் உலக அளவில் ஜெயிலர் 600 கோடி வரை வசூலித்து மாஸ் காட்டி வருகிறது. அதனாலேயே சன் பிக்சர்ஸ் தற்போது ரஜினிக்கு லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை கொடுத்து சந்தோஷப்படுத்தி இருக்கிறது.

இவ்வாறாக வசூல் வேட்டை நடத்திய டைகர் முத்துவேல் பாண்டியன் இன்னும் சில வாரங்களில் ஓடிடி தளத்தையும் அதிர வைக்க வருகிறார். அதன்படி ஜெயிலரை பல கோடி கொடுத்து வாங்கி இருக்கும் அமேசான் பிரைம் விரைவில் படத்தை வெளியிட்டு லாபம் பார்க்க காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: ரஜினியை குளிர வைத்த கலாநிதி மாறன்.. பண மழையில் நனையும் சூப்பர் ஸ்டார்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்