சிம்புவிற்கு அடித்த அடுத்த ஜாக்பாட்.. சரியாக காய் நகர்த்தும் தயாரிப்பாளர்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் திரையரங்கில் ரிலீஸாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ஏனென்றால் நீண்ட நாட்களாக ரிலீஸ்க்கு தயாராகி காத்திருந்த மாநாடு திரைப்படம் பலவித தடைகளை மீறி கடந்த வியாழக்கிழமை அன்று ரிலீஸ் செய்யப்பட்டு முதல் நாள் வசூல் ரூபாய் 8.24 கோடியை தட்டிக் தூக்கியுள்ளது.

எனவே மாநாடு படத்தினால் சிம்புவின் அடுத்த படமான வெந்து தணிந்த காடு படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. இதனால் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து கொண்டிருக்கும் வெந்து தணிந்த காடு படத்தினை வேல்ஸ் பிலிம் இன்டர்நெஷனல் நிறுவனத்தின் ஐசரி கணேசனுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

ஏனென்றால் மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிம்புவின் வெந்து தணிந்த காடு படம் ரூபாய் 25 கோடி விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் வெந்து தணிந்த காடு படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடத்தி முடித்த பின், தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிலம்பரசனுக்கு அம்மாவாக ராதிகா நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஆகையால் சென்னையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அதை தொடர்ந்து படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தும் புதுச்சேரியில் படமாக்க இயக்குனர் கௌதம் மேனன் திட்டமிட்டுள்ளார். ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்பதற்கேற்ப சிம்புவின் படத்திற்கு தற்போது மவுசு கூடியுள்ளது.

எனவே இந்த சமயத்தை ஐசரி கணேசன் சரியாக பயன்படுத்த திட்டம் தீட்டி கொண்டிருக்கிறார். அத்துடன் படம் முழுவதுமாக முடிப்பதற்கு முன்பே சிம்புவின் வெந்து தணிந்த காடு படத்தின் விற்பனை தாறுமாறாக எகிறுகிறது என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்