ஊருக்குத்தான் உபதேசம், ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க துப்பில்லை.. பாரதியை ரவுண்டு கட்டி அடிக்கும் கண்ணம்மா

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இதில் தற்போது வெண்பா ஒரு டிராமா போட்டு பாரதியை கல்யாணம் செய்யும்படி திட்டம் போட்டுள்ளார். அதாவது தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு பாரதி தான் அப்பாவாக வேண்டும் என்று வெண்பா உறுதியாக உள்ளார்.

இதனால் விஷம் குடித்துவிட்டு மருத்துவமனையில் இருக்கும் வெண்பாவைப் பார்த்த பாரதி மனம் உறங்கி அவரை கல்யாணம் செய்து கொள்வதாக ஒற்றுக்கொள்கிறார். ஒருவர் பிரசவத்திற்காக ஒரு பெண்ணை பாரதியின் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரது கணவர் இந்த குழந்தை எனக்கு பிறக்கவே இல்லை என கூச்சல் இடுகிறார்.

Also Read :டிஆர்பிக்காக ராஜ்கிரண் வைத்தெரிச்சலை கொட்டிய பிரபல சேனல்.. விஜய் டிவியை மிஞ்சுடுவாங்க போலயே

இதைக் கேட்ட பாரதி இதற்கு ஒரே வழி டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பதுதான். முதலில் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்த அது உங்கள் பிள்ளையா என பார்க்கலாம் என்று கூறுகிறார். இதைப் பார்த்த கண்ணம்மா ஊருக்குத்தான் உபதேசமா, உங்களுக்கு சந்தேகம் இருந்தா நீங்க ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்க்க வேண்டியதுதானே என கூறுகிறார்.

இதனால் பாரதி தனியாக உட்கார்ந்து யோசித்துப் பார்க்கிறார். கண்ணம்மா சொல்வதிலும் நியாயம் இருப்பதாக அவரது மனசாட்சி சொல்கிறது. இதனால் யாருக்கும் தெரியாமல் பாரதி தனது மகள் லட்சுமியின் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்த பார்க்க உள்ளார். அப்போது லட்சுமியின் அப்பா பாரதி தான் என்ற உண்மை தெரியவர உள்ளது.

Also Read :ஆட்டம் கண்ட டாப் சீரியல்.. டிஆர்பியால் விஜய் டிவி எடுத்த அதிரடி

மேலும் இத்தனை நாள் கண்ணமாவை சந்தேகப்பட்டு விட்டதாக பாரதி மன உளைச்சலுக்கு உள்ளவர். வெண்பா பாரதியை உடனடியாக திருமணம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தி வருவதால் பாரதி என்ன முடிவு எடுக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்புடன் பாரதி கண்ணம்மா தொடர் வர இருக்கிறது.

மேலும் எல்லோர் முன்னாடியும் கண்ணம்மா குற்றம் அற்றவள் என்பதை ஒத்துக்கொண்டு பாரதி அவருடன் சேர்ந்து வாழ அதிக வாய்ப்புள்ளது. வெண்பாவின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பா ரோகித் சாரதி என்ற உண்மையையும் மிக விரைவில் வெளியாகும்.

Also Read :பாக்கியாவிற்காக பரபரப்பை கிளப்பும் மகா சங்கமம்.. இனி கோபி,ராதிகா கதி அதோகதிதான்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்