திருமணத்தை உஷாராக நிறுத்திய சினேகா.. 25 லட்சம் ஏமாந்தது உண்மையா.?

தமிழ் திரையுலகில் பிரபலமான நட்சத்திர ஜோடி சினேகா பிரசன்னா ஜோடி. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நடிகை சினேகா ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபர் தன்னிடம் 25 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

திரையுலகைச் சார்ந்த நடிகர் நடிகைகள் பலரும் தாங்கள் சம்பாதித்த பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்வது வழக்கமான ஒன்று. அதேபோல் நடிகை சினேகாவும் திருமண மண்டபம், ரியல் எஸ்டேட் போன்ற பல்வேறு தொழில்களில் தன்னுடைய பணத்தை முதலீடு செய்துள்ளார்.

சினேகா தான் சம்பாதித்த பணத்தை சாமர்த்தியமாக பல தொழில்களில் முதலீடு செய்து அதில் லாபம் பார்த்து வருகிறார். அப்படியிருக்கும் நிலையில் சினேகா தற்போது 25 லட்ச ரூபாய் ஏமாந்து விட்டேன் என்று கூறுவது சற்று நெருடலாக உள்ளது. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை பற்றி கூறலாம்.

நடிகை சினேகா, பிரசன்னாவை திருமணம் செய்வதற்கு முன்பு ஒரு பிரபலமான தொழிலதிபரை காதலித்தார். இவர்களுடைய காதல் இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் வரை சென்றது. நிச்சயதார்த்தத்தில் அந்த தொழிலதிபர் சினேகாவுக்கு விலை மதிப்புள்ள வைர மோதிரத்தை பரிசளித்தார். அது சம்பந்தப்பட்ட போட்டோக்கள் அப்போது வெளியானது.

ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்த பத்து நாட்களுக்குள் சினேகா அந்த தொழில் அதிபரின் நடத்தை சரியில்லை என்று திருமணத்தை நிறுத்தி விட்டார். இந்த செய்தி அப்போது திரை உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பின்னர் சினேகா, பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அந்த அளவிற்கு உஷாராக இருக்கும் சினேகா எப்படி 25 லட்ச ரூபாய் ஏமாந்து இருக்க முடியும். தொழில் தொடர்பாக அவர்களுக்குள் எழுந்த பிரச்சனையே போலீசில் புகார் அளிக்கும் அளவுக்கு சென்றிருக்கலாம் என்று தெரிகிறது. எது எப்படியோ உண்மை என்ன என்று இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

ஒரு தரப்பில் இதற்கான வாய்ப்புகள் எதுவுமே இல்லை என்பது போன்ற நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்வதற்கு முன்னதாக உஷாராக இருப்பார் சினேகா என்றும் கூறி வருகின்றனர். ஆனாலும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்