மாடர்ன் மம்மிக்கு ஓகே சொன்ன மகள்.. இனிமே கோபிய கையிலே பிடிக்க முடியாது

விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடரில் இனியா தற்போது பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். இதனால் கோபி மகளுக்கு ட்ரீட் வைப்பதற்காக ஒரு ரெஸ்டாரன்ட் அழைத்துச் செல்கிறார்.

கோபி என்னதான் பாக்யா மீது வெறுப்பாக இருந்தாலும் தனது குழந்தைகளுடன் மிகுந்த பாசமாக தான் இருப்பார். அதுவும் கோபியின் மகள் இனியா என்றால் அவருக்கு தனி பாசம்தான். ஆனாலும், கோபி ராதிகாவை திருமணம் செய்து கொண்டால் இனியா என்ன நினைப்பாள் என்ற கவலை கோபிக்கு இருந்தது.

இதைப் பயன்படுத்திக் கொண்டு கோபி, அம்மாவும் நானும் பிரிஞ்சி போனா நீ யாருடன் இருப்ப என கேட்கிறார். அதற்கு இனியா நான் உங்களோட தான் டாடி இருப்பேன், அம்மா செம போர் என கூறுகிறாள். மேலும் உனக்கு மாடர்னா ஒரு மம்மி வேண்டுமா என கோபி கேட்க அதற்கும் இனியா சம்மதித்தால் கோபி மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

இந்நிலையில் கோபியும், இனியாவும் பாக்கியாவை ஒதுக்கி வைப்பது பாக்யாவிற்கு ஒரு உறுத்தலாக உள்ளது. மேலும் அமிர்தாவிடம் ரவுடிகள் பிரச்சனை பண்ணியது அவரின் மாமியார் மூலம் எழிலுக்கு தெரியவருகிறது. இதனால் எழில் மிகுந்த கோபத்துடன் அமிர்தாவை வெளியில் அழைத்துச் செல்கிறார்.

அங்கு சென்று அமிர்தாவிடம் பிரச்சினை செய்த ரவுடிகளை அடிக்கிறார். மேலும் நான் தான் அமிர்தாவின் புருஷன் என எல்லோர் முன்னாடியும் சொல்கிறார். இதைக் கேட்ட அமிர்தா அதிர்ச்சி அடைகிறாள். மேலும் தனக்கு பாதுகாப்பாக எழில் இருப்பதால் அமிர்தாவுக்கு எழில் மேல் காதல் வர வாய்ப்புள்ளது.

இதனால் முதலில் அப்பாவுக்கு திருமணம் ஆகிறதா இல்லை மகனுக்குத் திருமணம் நடக்கிறதா என்ற பெரிய எதிர்பார்ப்பு பாக்கியலட்சுமி தொடரில் வந்துள்ளது. இதனால் பல சுவாரஸ்யமான கதை களத்துடன் பாக்கியலட்சுமி வர இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்