கோபியை செவில்லையே விட்ட அப்பா.. எங்க வந்து யார்கிட்ட படம் போடுற

விஜய் டிவியில் கடந்த சில வாரங்களாக டிஆர்பியில் முதல் இடத்தைப் பிடித்து வருகிறது பாக்கியலட்சுமி தொடர். போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் பாக்யாவை காப்பாற்ற எழில் படாதபாடு படுகிறார். எப்படியாவது தன் அம்மா குற்றமற்றவர் என நிரூபித்து அவரை வெளியே கொண்டு வர வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுகிறார்.

இந்நிலையில் கோபி தனது மனைவியைப் பற்றி எதுவும் கண்டுகொள்ளாமல் ராதிகாவுக்கு உதவி செய்கிறார். இனியா கோபிக்கு போன் செய்து பாக்யாவுக்கு நடந்ததைக் கூறி அழுகிறாள். உடனே இங்க வாங்கப்பா என இனியா கூறுகிறாள். இருந்தாலும் கோபிக்கு கொஞ்சம் மனதில் ஈரம் தான் இருக்கிறது.

கோபி, பாக்கியாவை நினைத்து வருந்தி வீட்டுக்கு கிளம்ப முயற்சிக்கிறார். ஆனால் ராதிகாவின் பாச மழையால் கோபி வீட்டுக்கு போக முடியாமல் சூழ்நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் மறுநாள் காலை கோபி தனது வீட்டுக்கு வருகிறார். எல்லோர் முன்னிலையிலும் பாக்கியா எங்கே என கோபி கேட்கிறார்.

உடனே அவரது அம்மா, நைட்டு ஃபுல்லா எங்கேயே தங்கிட்டு காலையில வந்து பாக்யா எங்கன்னு கேட்கிறாயா, ரொம்ப நல்லா இருக்கும் என திட்ட ஆரம்பிக்கிறார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட கோபியின் தந்தை ஆத்திரத்தில் கோபியை செவ்வியிலேயே அறை விடுகிறார்.

ஒன்றல்ல, இரண்டல்ல பளார் பளார் என நான்கு அறையை விடுகிறார். குடும்பமே கோபியின் தந்தையை தடுக்க, கோபி அரண்டு போய் இருக்கிறார். மேலும் ரசிகர்களின் பல நாள் கனவு இன்று நிறைவேறியுள்ளது. மேலும் இப்பயாவது கோபி திருந்துவார் என்று பலர் என்னலாம், ஆனால் அது இந்த ஜென்மத்துல நடக்காது.

இது ஒரு பக்கம் இருக்க வேறு யாரோ கொடுத்த லட்டில் தான் பிரச்சனை இருக்கிறது என்பதை எழில் கண்டுபிடித்து தனது அம்மாவை மீட்டு வருகிறார். இவ்வாறு பல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இந்தவார பாக்கியலட்சுமி தொடர் வரை இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்