சித்ராவை அடித்து,கடித்து சித்திரவதை செய்த ஹேமந்த்.. பகீர் கிளப்பிய வைரல் வீடியோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் பிரபலமான நடிகை சித்ராவின் இழப்பு அவருடைய ரசிகர்களுக்கு பேரிழப்பானது. மேலும் அவருடைய மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் இந்த நிலையில் ஹேமந்த்தின் 10 வருட நண்பரான ரோகித் தற்போது பகிரங்க பேட்டி ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

அதில் அவர், ஹேமந்த் சித்ராவை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும், சில நேரங்களில் கோபத்தில் கடித்தும், நகத்தால் சித்ராவின் உடல் முழுவதும் காயம் ஏற்படுத்தும் கொடுமைக்காரன்.

மேலும் ஹேமந்த்க்கு சித்ராவின் கற்பின் மீது சந்தேகம் ஏற்பட்டு, என்னுடைய மனைவி டாக்டர் என்பதால், சித்ராவிற்கு வெர்ஜினிட்டி(Virginity) டெஸ்ட் எடுக்கச் சொன்னான்.

அதுமட்டுமில்லாமல் சித்ராவை பலமுறை சந்தேகப்பட்டு, ‘நீ எல்லாம் கற்புடைய பொண்ணா இருந்தா, செத்துரு’ என பலமுறை திட்டுவதை பழக்கமாக வைத்திருப்பான். இதெல்லாம் ஹேமந்த்தின் அப்பாவுக்கும் தெரியும்.

எனவே சித்ராவின் மரணத்திற்கு முழுக்க முழுக்க ஹேமந்த்தும், அவருடைய அப்பாவும் தான் காரணம் என்று தனது பேட்டியின் மூலம் ரோஹித் தெரிவித்துள்ளார்.

ஆகையால் ஹேமந்த்தின் மீது போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. மேலும் ஹேமந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியைப் பார்க்க கீழே கிளிக் செய்யவும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்