நீ தம்மடிக்க போலாம் நான் பாத்ரூம் போக கூடாதா.. கொந்தளித்த தாமரை!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான தலைவர் போட்டி விறுவிறுப்பாக சென்றது. ஏனென்றால் வீட்டில் இருக்கும் 10 போட்டியாளர்களும் ஒரே கயிறை விடாமல் பிடித்து இருக்க வேண்டு.ம் கடைசிவரை யார் பிடித்து இருக்கிறார்களோ, அவர்களே பிக்பாஸ் வீட்டின் கேப்டன் என அறிவிக்கப்பட்டது.

இதனால் 10 பேரும் தொடக்கத்தில் சேர்ந்தே சாப்பிட்டனர். பிறகு நிரூப் புகை பிடிக்க வேண்டும் என்று கேமரா இல்லாத அறைக்கு சென்றார். அங்கும் பத்து பேரும் ஒன்றாக சேர்ந்தே சென்றனர். அதன்பிறகு தாமரை பாத்ரூம் போக வேண்டும் என்று சொன்னதும், நிரூப் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

ஏனென்றால் தாமரை பாத்ரூமில் கயிறை விடாமல் பாத்ரூம் செல்கிறேன் என்று சொன்ன பிறகும் நிரூப், அதை நம்பு முடியாது என்று தாமரையுடன் வாதிட்டார். அதன் பிறகு பேசிய தாமரைச்செல்வி, ‘நான் என்னுடைய ரெண்டு கையையும் எடுக்காமல் தான் பாத்ரூம் சென்றேன்’ என்று ஆணித்தரமாக கூறினார்.

பிறகு இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. கோபத்தின் உச்சிக்கே சென்ற தாமரை, நீ தம் அடிக்கணும்னு போன போது தாங்கள் உள்ளே வந்து பார்க்கவில்லை. அப்ப நீ கையை கயிற்றில் இருந்து எடுத்து இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதை செய்திருக்க மாட்டாய் என்று நாங்கள் நம்புகிறோம்.

அதேபோல் நான் பாத்ரூம் போகும் போதும் கயிற்றை விடாமல் கையிலே பிடித்து இருந்தேன் என்று சொல்லும்போது நீ நம்ப வேண்டும்’ என்று சரியாக வாதிட்டார். அதன் பிறகு 10 பேரும் எங்கேயுமே செல்லக்கூடாது என்று ஒரே இடத்தில் அமர்ந்து விட்டேன்.

அதன் பின் அவர்கள் ஒவ்வொருவராக கயிற்றை விட இறுதியில் அமீர் மற்றும் தாமரை இடையே தலைவருக்கான போட்டியில் சுமார் 16 மணி நேரம் போராடி கடைசியில் தாமரை பிக் பாஸ் வீட்டின் கேப்டனாக மாறிவிட்டார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்