சம்பளத்தை உயர்த்திய ஹன்சிகா.. தமிழில் பறி போகும் வாய்ப்பு

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக இருந்த இவர், 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் ஜோடியாக தேசமுருடு என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

தென்னிந்திய சினிமாவில் மிகவும் கவர்ச்சிகரமான நடிகைகளில் ஒருவரான இவர் இளம் வயதிலேயே அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். ஹன்சிகா குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான கதாநாயகியாக வலம் வந்த ஹன்சிகாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது. ஹன்சிகா, சிம்புவுடன் மஹா படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், ஹிந்தி படங்களில் மிகவும் பிஸியாக உள்ள ஹன்சிகா படங்களில் ஹீரோயினாக நடிக்க சுமார் 1 கோடி வரை சம்பளம் உயர்த்தி உள்ளாராம். இதனால் ஹிந்தி சினிமாவில் ஹன்சிகாவின் மார்க்கெட் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹன்சிகா தற்போது தெலுங்கில் மை நேம் இஸ் ஸ்ருதி என்ற படத்திலும், தமிழில் ரவுடி பேபி என்ற படத்திலும் நடித்து வருகிறார். தமிழில் ஒரு படம் மட்டுமே நடித்து வரும் நிலையில் சம்பளத்தை உயர்த்தி உள்ளதால் இவருக்கு தமிழில் இனி பட வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்