Connect with us
Cinemapettai

Cinemapettai

gunasekaran -family

Tamil Nadu | தமிழ் நாடு

அவா எவன் கூட படுத்தா உனக்கு என்ன.? அடி மேல் அடி வாங்கும் எதிர்நீச்சல் குணசேகரன்

குணசேகரனுக்கு எதிராக அரசு போடும் திட்டம் பக்க பலமாக இருக்கப் போகும் எதிர்நீச்சல் குடும்பம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் மற்றும் எஸ் கே ஆரின் தம்பி அரசுக்கும் இடையே கடும் மோதல் ஆனது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்கள் எடுத்துள்ள சபதத்தில் விடாப்பிடியாக இருந்து வருகின்றனர். மேலும் அதற்கான செயல்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.   

அதிலும் எஸ் கே ஆர் இன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு குணசேகரனின் குடும்பத்துடன் சம்பந்தம், வைத்துக்கொள்ள துள்ளி கூட விருப்பமில்லாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தது போல் குணசேகரனின் செயல்களானது அமைந்துள்ளது. எஸ் கே ஆர் இன் குடும்பத்திற்கு விருப்பமில்லாத அருண், ஆதிராவின் திருமணத்திற்கு குணசேகரனே ரூட்டை போட்டு கொடுத்துள்ளார். 

Also Read: எதிர்நீச்சல் குணசேகரன் இயக்கிய 2 தரமான ஹிட் படங்கள்.. பிரசன்னாவை நடிகனாய் மாற்றிய தரமான கதை

குணசேகரன் தனது அகங்காரத்தால் வாயை கொடுத்து உடம்பை புண்ணாக்கி கொண்டுள்ளார். அப்பொழுது ஞான சேகரனால் காப்பாற்றப்பட்ட இவர் ஞானத்தை அவமானப்படுத்தியது, தவறு என எண்ணி பாசம் என்ற வேசத்திற்கான டிராமாவை போட ஆரம்பித்துள்ளார். இதுவரை அவமானப்படுத்தியதை எல்லாம் மறந்துவிட்டு காலில் விழுந்ததற்காக, ஒரு நொடியில் மனம் மாறி தனது அண்ணனுக்கு சாதகமாக அந்தர் பல்ட்டி அடித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து ரேணுகா எவ்வளவு சொல்லியும் அண்ணனின் நீலி கண்ணீரில் மயங்கி மனம் மாறியுள்ளார். அதிலும் குடும்பமே ஆதிராவிற்கு ஆதரவாக மருத்துவமனையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டிற்கு வந்த நந்தினியிடம் கதிர் சரமாரியாக கேள்விகளைக் கேட்டு வெளுத்து வாங்கியுள்ளார். 

Also Read: எதிர்நீச்சலின் 500-வது எபிசோட் இப்படித்தான் இருக்கும்.. கிளைமாக்ஸ் ரகசியத்தை போட்டு உடைத்து திருச்செல்வம்

ஆதிராவை சகோதரி என்று கூட பார்க்காமல் துணையாய் இருந்த நந்தினியை கண்டவளுக்காக, நீ எதற்காக போனாய் என்று திட்டி தீர்த்துள்ளார். மேலும் குணசேகரன் செய்த குளறுபடியால் ஆதிராவின் திருமணத்தை கண்டிப்பாக, நடத்தி வைப்பேன் என்று அரசு சவால் விடுத்துள்ளார். இதனால் அப்பத்தாவின் 40% பங்கை வைத்து குணசேகரனுக்கு எதிராக ஆட்டத்தை ஆரம்பிக்க அரசு திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்.

இதனால் கண்டிப்பாக எஸ் கே ஆர் குடும்பத்திற்கு சாதகமாக தான் நடக்கப் போகிறது என்று மக்கள் யோகித்து வருகின்றனர். மேலும் ஞானசேகரன் எவ்வளவு பட்டாலும் திருந்த போவதில்லை என்று ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றுகின்றனர். அதிலும் குணசேகரனின் பாசம் என்ற டிராமாவிற்கு அவார்டே கொடுக்கலாம் என்று விமர்சகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

Also Read: இந்த கவர்ச்சி உடையில் குணசேகரன் பார்த்தா நீங்க காலி.. குடும்ப குத்து விளக்கு ஈஸ்வரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Continue Reading
To Top