யாரையும் சந்திக்காத கவுண்டமணி சிவகார்த்திகேயனை அடிக்கடி சந்திப்பது ஏன்? இந்த பையன் ஏதோ பண்ணிருக்காரு!

கடந்த சில வருடங்களாகவே பத்திரிக்கையாளர்களை கூட சந்திக்காத கவுண்டமணி அடிக்கடி சிவகார்த்திகேயனுடன் மட்டும் நெருங்கிய நட்பில் இருப்பது ஏன் என்பதை அவர்களது நெருங்கிய வட்டாரங்களில் விசாரணை செய்ததில் நிறைய செய்திகள் கிடைத்துள்ளது.

டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இனி அவரே நினைத்தாலும் சினிமாவை விட்டு விலகி போக முடியாது. அந்த அளவுக்கு ஒரு நிலையான மார்க்கெட்டை உருவாக்கி கொண்டார்.

ஒருவேளை சிவகார்த்திகேயன் நடிப்பில் தொடர்ந்து பல படங்கள் தோல்வியை சந்தித்தாலும் அவரை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்களும் காத்துக் கொண்டிருப்பார்கள். அந்தளவுக்கு படிப்படியாக தன்னுடைய சினிமா வளர்ச்சியை செதுக்கி வைத்துள்ளார்.

இது கவுண்டமணிக்கு மிகவும் பிடித்த ஒன்றாக மாறிவிட்டதாம். ஒரு பையன் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்து சினிமாவில் இன்றைய முன்னணி நட்சத்திர நடிகர்களை வெகு சீக்கிரத்தில் ஓரம்கட்டி முன்னுக்கு வந்து விட்டாரே என்கிற ஆச்சரியம்தானாம்.

அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் தன்னுடைய படங்களில் குடும்ப ரசிகர்களை கவரும்படி அதே நேரத்தில் பெரும்பாலும் இரட்டை அர்த்த காமெடிகளை தவிர்த்து நடித்து வருவது கவுண்டமணியை மிகவும் இம்ப்ரஸ் செய்து விட்டதாம். அதேப் போல் பெற்றோர்களுக்கு அவர் கொடுக்கும் மரியாதையும் கவுண்டமணிக்கு ரொம்ப பிடித்து விட்டதாம்.

இன்றைய தேதிக்கு கவுண்டமணி பட விழாவுக்கு விஜய் அஜித்தை கூப்பிட்டாலே வந்துவிடுவார்கள். ஆனால் கவுண்டமணியோ கடைசியாக அவர் நடித்த 49-ஓ என்ற பட விழாவுக்கு சிவகார்த்திகேயன் கண்டிப்பாக வந்தே ஆகவேண்டும் என தன்னுடைய நெருங்கிய வட்டாரங்களில் கூறி அழைத்து வந்துள்ளார்.

அன்றிலிருந்து இன்றுவரை சிவகார்த்திகேயன் மற்றும் கவுண்டமணி ஆகிய இருவரும் அடிக்கடி சந்தித்து பேசுவதாக கூறுகின்றனர். நேற்று இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படம் கூட இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

sivakarthikeyan-goundamani-cinemapettai-01
sivakarthikeyan-goundamani-cinemapettai-01
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்