அநியாயத்துக்கு நல்லவனாக மாறிய கோபி.. நம்பலாமா வேணாமான்னு பார்க்கும் எழில்!

விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னிலையில் கோபி தன்னுடைய கல்லூரி காதலியுடன் பொங்கல் கொண்டாடாமல் மனைவியிடம் மாட்டிக் தவித்துக் கொண்டிருக்கிறார்.

அத்துடன் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் கோபியின் தகாத உறவு மெல்ல மெல்ல தெரிந்து கொண்டு இருக்கிறது. இந்த சூழலில் கிராமத்திற்கு சென்று உள்ள பாக்யாவின் குடும்பத்தினருடன் எழிலின் காதலி அமிர்தாவும் சென்றுள்ளார். அமிர்தா தன்னுடைய மகள் நிலாவை கூட அழைத்து சென்றுள்ளார்.

இன்னிலையில் நிலாவை கோபி தூக்கி வைத்து கொஞ்சம் காட்சி தற்போது அரங்கேறியுள்ளது. பொதுவாக கோபி குடும்பத்தினருடன் ஒட்டாமல் தனியே அமர்ந்து ராதிகாவுடன் கடலை போடுவது வழக்கம். ஆனால் அவ்வாறு செய்யாமல் தற்போது அமித்ஷாவை முதன்முதலாக பார்த்து பேசிய கோபி, அவருடைய மகள் நிலாவையும் தூக்கிவைத்து பேசுவது எழிலுக்கு கொஞ்சம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் இதை நம்பலாமா வேண்டாமா கோபி நாடகமாடுகிறாரா? இல்லை நிஜமாவே கோபி மாறிவிட்டாரா? என்று எழில் குழம்பி உள்ளார். ஆனால் கிராமத்தில் சந்தோஷமாக பொங்கல் கொண்டாடும் குடும்பத்தினருடன் கோபி கொஞ்சம் கொஞ்சமாக கலந்துரையாட முயற்சிக்கிறார்.

இருப்பினும் கோபிக்கு ஒருபுறம் ராதிகாவின் நினைப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே பொங்கல் பண்டிகையை கிராமத்தில் முடித்துவிட்டு சென்னைக்கு சென்றதும் முதல் வேலை ராதிகாவுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்று கோபி தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ஆனால் ராதிகாவிடம் இருந்து கோபியை பிரிக்க கோபியின் அப்பா முயற்சி செய்துகொண்டிருக்கிறார். எனவே இதில் யாருடைய எண்ணம் பழிக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்