இப்படி வசமா சிக்கியதற்கு தூக்குல தொங்கலாம்.. பேரன பாக்குற வயசுல என்னென்ன ஆட்டம் போட்ட கோபி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பம் அரங்கேறுவதால் சின்னத்திரை ரசிகர்களுக்கு இந்த சீரியல் இஷ்டமான சீரியலாக மாறிவிட்டது. இந்நிலையில் ஒட்டுமொத்த குடும்பத்திற்குமே கோபி-ராதிகா இருவரின் கள்ளக்காதல் தெரிந்த நிலையில் பாக்கியலட்சுமி குடும்பமே கோபியை கும்மு கும்முன்னு கும்முகிறார்கள்.

அதிலும் பாக்யா தன்னை கோபி விவாகரத்து செய்து கொள்ளும் எண்ணத்தில், தனக்கே தெரியாமல் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற விவகாரத்தை சொன்ன பிறகு, அதை நம்ப மறுத்த கோபியின் அம்மாவிற்கு சாட்சியாக அந்த சமயம் நீதிமன்றத்திலிருந்து கோர்ட் ஆர்டர் வந்தது.

அதில் ஆறு மாதங்களுக்கு முன்பு இருவரும் சம்மதித்து பிரிய விரும்புவதால் நாளை நீதிமன்றம் வந்து விவாகரத்து பெற்றுக்கொள்ள உறுதி செய்யுமாறு அழைப்பு விடுக்கின்றனர். இதைப் பார்த்ததும் கோபியின் அம்மா, எழில் மற்றும் செழியன் ஆகியோர் கோபத்தின் உச்சத்துக்கு சென்று கோபியை சரமாரியாக வார்த்தைகளால் வெளுத்து வாங்குகின்றனர்.

எல்லை மீறிய எழில், அப்பாவின் சட்டையைப் பிடித்து அடிக்கப் போகிறான். ‘நம்மளை பிடிக்காது என ஒதுங்கியவரை ஒதுக்கிவிட வேண்டும்’ என எழிலை சமாதானப்படுத்துகிறார் பாக்யா. அதன்பிறகு கோபத்தை அடக்கிக் கொள்ள முடியாமல் கோபியின் அம்மா கோபியை கன்னத்தில் பளார் பளார் என அறைவிடுகிறார்.

இப்படி கோபி, குடும்பத்தினரிடம் மொத்து வாங்குவதை ரசிகர்கள் கண் கொள்ளாத காட்சியாக பார்க்கின்றனர். ‘மகனுக்குத் திருமணம் செய்ய வேண்டிய வயதில் உனக்கு இரண்டாவது திருமணம் ஒரு கேடா, பேரன பாக்குற வயசுல என்னென்ன ஆட்டம் போட்ட கோபி’ என்றும் சோசியல் மீடியாவில் கோபியை கழுவி கழுவி ஊற்றுகின்றனர்.

இதன் பிறகு பாக்யா ஒரு நிமிடம் கூட கோபியுடன் சேர்ந்து வாழ தயாராக இல்லை. இதனால் வீட்டை விட்டு வெளியேறும் பாக்யா இனிமேல் சுயமா தன்னுடைய வாழ்க்கையை துவங்க போகிறார். மேலும் கோபியும் தன்னுடைய குடும்பத்தை பார்க்க முடியாமல் கூனிக்குறுகுகிறார்.

கோபி இனி ராதிகா வீட்டில் தங்க முடிவு எடுத்து அங்கே கிளம்புகிறான். ராதிகாவும் கோபியை மன்னித்து ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார். ஆனால் குடும்பத்தைப் பொறுத்தவரை கோபிக்கு இனி மரியாதை கிடைக்காது என்பது தெரிந்துவிட்டது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்