போதை தெளிந்தவுடன் கேவலப்பட்ட கோபி.. எவ்வளவு அசிங்கப் பட்டாலும் அசராத அங்கிள்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் மகா சங்கமத்திற்கு பிறகு ஒளிபரப்பான அனைத்து எபிசோடுகளிலும் ரசிகர்கள் இவ்வளவு நாள் எதிர்பார்த்த அத்தனை நிகழ்வுகளும் ஒளிபரப்பாகுவதால் பாக்கியலட்சுமி சீரியலை தவறாமல் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

பாக்யாவின் கணவர்தான் கோபி என்ற உண்மை ராதிகாவிற்கு தெரிந்ததால் கொஞ்சம் கூட யோசிக்காமல் ராதிகா கோபியை தூக்கி எறிந்து விட்டாள். அதன் பிறகு வீட்டிற்கு சென்ற கோபி, குடிபோதையில் பாக்யாவிடமும் தனக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் போதையில் உளறி கொட்டி விட்டான்.

காலை போதை தெளிந்ததும் பாக்யாவிடம் நல்லவன் போல் பேசுகிறான். ஏற்கனவே மன உளைச்சலில் இருக்கும் பாக்யாவிற்கு 25  வருடங்களாக தன்னுடன் திருமண உறவில் இருக்கும் கோபி தன்னைப் பிடிக்காமல் தான் தன்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என மிகவும் வருத்தப் படுகிறார்.

அதையெல்லாம் கோபியிடம் காட்டிக்கொள்ளாமல் அவன் சொல்வதை மட்டும் கேட்டு அமைதியாக நிற்கிறாள். அதன்பிறகு வீட்டிலிருந்து புறப்பட்ட கோபி மீண்டும் ராதிகாவின் வீட்டிற்கு சென்று எதுவும் நடக்காதது போல் காட்டிக் கொள்கிறான்.

ஆனால் ராதிகா கோபியை ‘நீ யார்’? என என மூஞ்சியில் அடித்தார் போல் பேசியதால் கோபி குடிபோதையில் என்ன நடந்தது எனத் தெரியாமல் முழிக்கிறான். கோபத்தின் உச்சத்தில் இருக்கும் ராதிகா வெட்கம் மானம் சூடு சொரணை இருந்தால் இனிமேல் இங்கு வராதீர் என நாயை பேசுவது போல் பேசி துரத்துகிறாள்.

பிள்ளைகளுக்கு கல்யாணம் ஆகி பேரப்பிள்ளைகள் எடுக்கும் வயதில் ஒண்ணுக்கு ரெண்டு என இரண்டு பேரை ஒரே டிராக்கில் இவ்வளவு நாள் ஓட்டிக் கொண்டிருந்த கோபி, தற்போது மனைவி மற்றும் கள்ளக்காதலில் இருவரும் வெறுத்து ஒதுக்கும் நபராக மாறி விட்டான்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்