பாக்யா முன் கோபி செய்த கேவலமான வேலை.. மானங்கெட்ட சீரியலா இருக்கே

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் விவாகரத்து ஆன பிறகு கோபியை வீட்டை விட்டு வெளியேற்றிய பாக்யா. பிள்ளைகளுக்காக மீண்டும் திருந்தி வீட்டிற்கு வருவார் என நினைத்து வெளியேற்றினார். ஆனால் இதுதான் சாக்கு என கோபி வீட்டை விட்டு வெளியேறியதும் ராதிகாவிடம் தன்னை அப்பாவியாக காட்டிக்கொண்டு, அவருக்காகவே குடும்பத்தை எல்லாம் இழந்ததாக நம்ப வைத்து அவரை திருமணம் செய்து கொள்கிறார்.

அந்த திருமணத்திற்கு தான் பாக்யா சமைத்து கொடுக்க வந்திருக்கிறார். இந்த ஆர்டரை நல்லபடியாக முடித்துக் கொடுத்தால் இன்னும் பெரிய பெரிய திருமணத்திற்கான சமையல் ஆர்டர் கிடைக்கும். ஆகையால் இதனை நல்லபடியாக முடித்துக் கொடுக்கும் இக்கட்டான சூழ்நிலையில் பாக்யா இருக்கிறார்.

Also Read: இதைவிட ஒரு கேவலமான சீரியல் எடுக்க முடியாது.. உச்சகட்ட பரபரப்பில் பாக்கியலட்சுமி

ஒரு கட்டத்தில் வீட்டு வேலைக்காரி செல்வி ராதிகாவின் திருமணம் இங்கு தான் நடைபெறுகிறது என்பதை அறிந்து கொண்டு, பாக்யாவை திருமண மேடையில் ஜோடியாக இருக்கும் ராதிகா-கோபி முன்பு நிறுத்துகிறார். அதைப்பார்த்ததும் கதிகலங்கிய பாக்யா கோபியை எரிக்கும் அளவுக்கு முறைக்கிறார்.

அப்போது கோபி ராதிகாவின் நெற்றியில் முத்தம் கொடுப்பது போல் போட்டோஷூட் நடத்திக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் கோபியும் பாக்யாவை பார்த்து விட கோபத்தில் செல்வி, ‘வெட்கமாக இல்லையா சார். நீங்க ஒரு தில்லாலங்கடின்னு தெரியும்.

Also Read: புருஷன் கல்யாணத்துக்கு பொண்டாட்டி சமையல்.. பிரமாதம்! கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய கோபி

ஆனால் மனைவியை விட்டுவிட்டு பிள்ளைகளை கூட பார்க்காமல் இப்படி ஒரு முடிவை எடுத்தீர்கள்’ என்று மானங்கெட பேசுகிறார். உடனே கோபி, ‘பாக்யா என்னுடைய பொண்டாட்டி இல்லை. அவரை விவாகரத்து செய்துவிட்டேன். ராதிகா தான் என்னுடைய மனைவி’ என்று பாக்யாவை தூக்கி எறிந்து பேசுகிறார்.

இதன்பிறகு விரக்தியடைந்த பாக்யா நிலைகுலைந்து போய் இருக்கிறார். ஆனால் செல்வி இந்த கல்யாணத்திற்கு சமைத்து ஒன்றும் கொடுக்க வேண்டாம். கல்யாணத்தை முதலில் நிறுத்தணும் என்று கோபத்தில் கத்துகிறார். பாக்யா உடன் வந்த பெண்களும் இந்த ஆர்டர் முக்கியம் என்று சொல்கின்றனர்.

Also Read: டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் சன் டிவி.. விட்டுக்கொடுக்காமல் மல்லுக்கட்டும் விஜய் டிவி

இந்த ஆர்டரை சிறப்பாக நடத்திக் கொடுத்தால்தான் அடுத்தடுத்த ஆர்டர் கிடைக்கும் என்பதால், நாம் எதற்காக இங்கு வந்திருக்கிறோமோ அந்த வேலையை முடித்து விட்டு கிளம்புவோம் என்று செல்வியை சமாதானப்படுத்தி, புருஷனின் திருமணத்திற்காக மனைவியே சமைத்துக் கொடுக்கும் அக்கினிப் பரீட்சையை பாக்யா மேற்கொள்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்