இப்படி மாட்டிக்கிட்டியே கோபி.. கிழிந்து தொங்க போகும் கள்ளக்காதல்!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா தான் கோபியின் மனைவி என்ற விஷயம் தெரிந்தபிறகு ராதிகா கோபியின் உடன் இருக்கும் தொடர்பை முடித்துக் கொள்ளும் முடிவில் இருக்கிறாள். இதனால் ராதிகாவும் கோபியை அடியோடு தூக்கி எறிந்து விட்டாள்.

கோபி, ராதிகா வீட்டிற்கு வந்தபோது ‘விவாகரத்துக்குப் பிறகு பாக்யா தான் உங்களது மனைவி என தெரிந்தால் நிச்சயம் உங்களோடு வாழ மாட்டேன்’ என உயிர் தோழியான பாக்யாவின் வாழ்க்கையைக் கெடுக்கக்கூடாது என ராதிகா திட்டவட்டமாக இருக்கிறாள்.

இதை கோபியிடம் தெரியப்படுத்திய போது, கோபி ராதிகாவை சமாதானப்படுத்த முயற்சித்தாலும் அதை கொஞ்சம் கூட காது கொடுத்து கேட்க தயாராகவில்லை. இனிமேல் வீட்டிற்குள் வரக்கூடாது என்று கோபியை கழுத்தை பிடித்து வெளியே தள்ளி கதவை அடைத்து விடுகிறாள்.

இதன் பிறகு தொலைபேசியிலும் ராதிகா தன்னுடன் பேசாமல் இருப்பதால் கோபி கலக்கமடைந்து அவளுக்கு ஆடியோ மெசேஜ் அனுப்புகிறான். அதில், ‘தயவுசெய்து என்னுடன் பேசு ராதிகா. இப்படி உன்னை பார்க்காமல் பேசாமல் இருப்பது பைத்தியம் பிடிப்பது போல் இருக்கிறது. செத்துவிடலாம் போல இருக்கிறது’ என அந்த ஆடியோவில் பேசினான்.

இதை பாக்யா மறைந்திருந்து கேட்க, கோபியின் மீது ஏற்கனவே இருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகம் ஊர்ஜிதமானது. பிறகு கோபி, தூங்கியதும் அவனது தொலைபேசியை எடுத்து யாருடன் பேசியிருக்கிறார் என்பதை பாக்யா பார்க்க முயற்சிக்கிறாள். திடீரென்று கோபி விழித்து விட, பாக்யாவிடம் ‘என்னை வேவு பார்க்கிறாயா’ என கண்டபடி திட்டுகிறான்.

என்னமோ பாக்யா தப்பு செய்தது போன்றும், அதை கோபி கண்டு பிடிப்பது போன்றும் இருக்கிற மாதிரி கோபி பாக்யாவை திட்டுவது கொஞ்சம் கூட நியாயம் இல்லை என சீரியல் ரசிகர்கள் கோபியை கழுவிக் கழுவி ஊற்றுகின்றனர். இப்ப வேண்டுமானால் கோபி தப்பியிருக்கலாம். ஆனால்  கோபி இனி வரும் நாட்களில் இப்படி எல்லாம் தப்பிக்க முடியாது. நிச்சயம் ஒரு நாள் அவனுடைய கள்ளக்காதல் கிழிந்து தொங்க தான் போகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்