கோர்ட்டு வாசலில் பாக்யா மானத்தை வாங்கிய புருஷன்.. 3 பிள்ளை பெத்துக்கவரைக்கும் இனிச்சுதா கோபி

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் கட்டுன புருஷன் ஆக இருந்தாலும் சுயமரியாதை இல்லாத இடத்தில் இருக்கக் கூடாது என்பதை தெளிவாக புரிந்து கொண்ட பாக்யா, கோபிக்கு விவாகரத்து கொடுக்கப் போகிறார். ஆனால் இதற்கு முன்பு கோபி தான் பாக்யாவிற்கு தெரியாமல் விவாகரத்து பெறுவதற்காக அழைத்து வந்து எல்லா வேலைகளையும் பார்த்தார்.

அதன் பிறகு கோபியின் சுயரூபம் தெரிந்ததும் பாக்யாவே கோபிக்கு விவாகரத்து கொடுக்க முன்வந்தார். தற்போது ராதிகாவுடன் கோபி தொடர்பில் இருப்பது தவறுதான் என்பதை ஒத்துக் கொண்டாலும் பாக்யாவிற்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் மாடாய் உழைத்து போட்டதாக தன்னையே நியாயப்படுத்துகிறார்.

வீட்டுக்குள்ளே இருந்து கொண்டு இட்லி, தோசை சுட்டு போட்டுக்கிட்டு குடும்பத்தை பார்த்தால் மட்டும் போதாது என்று இப்பவும் கோபி கோர்ட்டு வாசலில் பாக்யாவை நிற்கவைத்து அவமானப்படுத்துகிறார்.

இப்படி எல்லாம் பேசுவதை பழைய பாக்யாவாக இருந்தால் கேட்டுக்கொண்டு அமைதியாக போய் விடுவார். ஆனால் இப்போது வெறி கொண்டு இருக்கும் பாக்யா நிச்சயம் இவருடன் சேர்ந்து வாழக் கூடாது என்று, தான்எடுத்த முடிவு சரியானது என உணர்கிறார்

அந்த அளவிற்கு கோபி இன்னுமும் பாக்யாவை ஏளனமாக பேசுகிறார். இவ்வளவு கேவலமாக பெற்ற பிள்ளைகளுக்கு உழைத்து போட்டதை எல்லாம் சொல்லிக் காண்பிக்கும் கோபி, நாளுக்கு நாள் படு மோசமாக நடந்து கொள்வது பாக்யாவை மேலும் சங்கடப்படுத்துகிறது.

எனவே இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள், ‘3 பிள்ளை பெத்துக்கவரைக்கும் இனிச்ச பாக்யா, ராதிகாவை பார்த்த பின் கசக்குகிறாரா, என கோபியை சோசியல் மீடியாவில் கழுவிக் கழுவி ஊற்றுகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்