கள்ளக்காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கோபியின் அப்பா.. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு செய்த செயல்

விஜய் டிவியில் விருவிருப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி தொடர். ராதிகாவிடம் கோபியின் சுயரூபத்தை வெட்ட வெளிச்சமாக காட்ட வேண்டும் என்ற ஆத்திரத்தில் கோபியின் தந்தை, பாக்கியா உடன் கோபி இருக்கும் போட்டோவை எடுத்துக் கொண்டு ராதிகா வீட்டிற்கு செல்கிறார்.

இதனால் இந்த முறையாவது ராதிகாவிற்கு உண்மை தெரிந்தால் கோபியின் நிலைமை என்னவாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் கோபியின் வீட்டில் அனைவரும் தாத்தாவை காணவில்லை என்ற பதட்டத்தில் அவரை தேட ஆரம்பிக்கிறார்கள்.

எழில் ஒருபக்கம் தேட, பாக்யாவும், செல்வியும் ஒரு பக்கம் தேடி வருகிறார்கள். இந்நிலையில் கோபியின் தந்தை ராதிகா வீட்டிற்கு செல்லும் வரை எனக்கு தெம்பு கொடு, அதற்கு பிறகு நான் செத்தாலும் பரவாயில்லை என மன தைரியத்தால் ராதிகா வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறார்.

அங்கு ராதிகா வேறு வீட்டுக்கு செல்வதற்காக பொருட்கள் எல்லாம் லாரியில் ஏற்றி கோபி, ராதிகா, மயூ எல்லோரும் காரில் சொல்கிறார்கள். இதைப்பார்த்த கோபின் தந்தை அங்கேயே மயக்கம் போட்டு விழுகிறார். அப்போது பாக்கியா, செல்வி இருவரும் கோபியின் தந்தையை பார்த்த உடனே எழிலுக்கு போன் செய்கிறார்கள்.

பின்பு எழில் வந்து தாத்தாவை ஆட்டோவில் அழைத்து செல்கிறார். தாத்தா எடுத்துச்சென்ற போட்டோவை எழில் தாத்தாவிடம் காட்டி இது எதுக்கு அங்கு எடுத்துக் சென்றீர்கள் என கேட்கிறார். இந்நிலையில் தாத்தாவின் செய்கையால் அந்தப் பெண்ணின் விடு அங்கு தான் இருக்கும் என்பதை எழில் கண்டுபிடிக்கலாம்.

ஆனால் அங்கிருந்த ராதிகா வீட்டை காலி செய்து விட்டதால் இதை எளிதில் கண்டுபிடிப்பது மிக சிரமம். மேலும், கோபி இனிமேல் தனக்கு எந்த பிரச்சனையும் வராது என்ற சந்தோஷத்தில் இருப்பார். ஆனால் இத்தொடரை இப்படியே இழுத்துக் கொண்டே செல்வதால் ரசிகர்களுக்கு சற்று அலுப்பும் வர ஆரம்பித்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்