என்னது இரண்டாம் திருமணமா.? அடுத்தடுத்து ஷாக் கொடுத்ததால் ரத்த கண்ணீரில் கோபியின் அப்பா

விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியல் ஆன பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது விறுவிறுப்பான கட்டம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் கோபி தன்னுடைய கல்லூரி காதலி ராதிகாவுடன் தொடர்பில் இருப்பதை பாக்கியலட்சுமி வீட்டிலிருக்கும் கோபியின் அப்பா ராமமூர்த்தி மற்றும் கோபியின் இளையமகன் எழில் ஆகியோருக்கு தெரியவந்துள்ள நிலையில், தற்போது பாக்யாவிற்கும் மெல்ல மெல்ல தெரிய ஆரம்பித்துள்ளது.

இதனால் இதுவரை கோபியின் மீது நம்பிக்கை வைத்திருந்த பாக்யா, கோபியை சந்தேகப்பட ஆரம்பிக்கிறார். அத்துடன் தற்போது கோபியின் வீட்டிற்கு வந்திருக்கும் ராதிகாவின் மகள் மயூ, தன்னுடைய அம்மாவிற்கும் பாட்டிக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுவதாகவும், தனது வீட்டிற்கு வந்துகொண்டிருக்கும் அங்கிளை பாட்டிக்கு பிடிக்காது என்பதால் தன்னுடைய அம்மாவிடம் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருப்பதாக கோபி வீட்டாரிடம் தெரிவிக்கிறார்.

அதுமட்டுமின்றி அந்த அங்கிளுக்கும் என்னுடைய அம்மாவிற்கும் இரண்டாவது திருமணம் நடைபெறப் போவதாகவும் மயூ கோபி வீட்டில் உளறிக் கொட்டுகிறார். அதன்பிறகு இனியா ‘யார் அந்த அங்கிள்?’ என்று கேட்க, ‘கோபி அங்கிள்’ என்று மயூ பதிலளிக்கிறார்.

இதை கேட்டதும் கோபியின் அப்பா ராமமூர்த்தி கண் கலங்கி, இன்னும் கோபி ராதிகா வீட்டிற்கு சென்று கொண்டு தான் இருக்கிறானா என்று தனக்குள்ளே பேசிக்கொண்டு ஆத்திரத்தில் அழுகிறார். இதன்பிறகு கோபியின் அப்பா கோபியிடம் இரண்டாவது திருமணம் பற்றி பேசினால் ‘ஆம் ராதிகாவை நான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் ‘என்று கோபி சொல்லதான் போகிறார்.

ஆகையால் கோபியின் அப்பா ராமமூர்த்தி மற்றும் எழில் இருவரும் சேர்ந்து பாக்யாவை சமாதானப்படுத்தி, கோபியை தண்ணி தெளிச்சு விடப் போகின்றனர். ஏனென்றால் இவ்வளவு நாள் பாக்யாவை மனைவியாக மதிக்காத கோபி இனிமேல் பாக்யாவிடம் சேர்ந்து வாழ்ந்து என்னவாகப் போகிறது என்று எழில் மற்றும் ராமமூர்த்தி ஏற்கனவே முடிவெடுத்து விட்டனர்.

அத்துடன் பாக்யாவின் கணவர்தான் கோபி என்பதை ராதிகா மற்றும் மயூ இருவரும் எவ்வாறு எடுத்துக்கொள்ள போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எனவே பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது அரங்கேறிக் கொண்டிருக்கும் விறுவிறுப்பான கட்டத்தினால் இந்த வார டிஆர்பி ரேட்டிங் எகிற போகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்