கள்ளக்காதலியிடம் வச்ச நம்பிக்கையை பொண்டாட்டிட வச்சிருக்கலாம் கோபி.. கோர்ட்டில் கதறும் பாக்யா

விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவிற்காக ஆஸ்ரமத்திற்கு சமைத்துக் கொடுத்த பாக்யா, சாப்பிட்ட குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்பட்டதால் அவர் மீது போலீஸ் கேஸ் போட்டதால் தற்போது பாக்யா போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறாள்.

ராதிகாவும் விசாரணைக்காக ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மனைவி இப்படி ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கிறார் என தெரிந்தும் கோபி ராதிகாவை விட்டு நொடி கூட விலகாமல், இதுவரை பாக்யாவை வந்து பார்க்காமலும் குடும்பத்தினருக்கு ஆறுதலாக இருக்காமல் ராதிகாவே கதியெனக் கிடக்கிறான்.

அதுமட்டுமின்றி பாக்யாவை வெளியில் எடுத்து வர செழியன் ஒருபுறம் வழக்கறிஞரை அனுகி, முயற்சித்தாலும் பாக்யாவின் தரப்பில் கேஸ் ஸ்ராங் ஆக இருப்பதால் அவளை வெளியில் கொண்டுவர முடியவில்லை.

ஆனால் ராதிகாவிற்காக கோபி அலைந்து திரிந்து ஒரு வக்கீலை அழைத்து போலீஸ் ஸ்டேஷன் வந்து ராதிகாவை விடுவித்து அழைத்துச் செய்கிறான். இப்படி பொண்டாட்டிக்காக மெனக்கெடாமல் கள்ளக்காதலுக்காக அலைந்து திரிவது பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கிறது.

இருப்பினும் பாக்யாவின் இரு சிங்கக்குட்டிகளான எழில் மற்றும் செழியன் இருவரும் பாக்யாவிற்கு பக்கபலமாக இருந்து, இந்தப் பிரச்சினையில் இருந்து விடுவிக்கிறார்.

மேலும் எழில், பாக்யா சமைத்த உணவில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், கடையில் ராதிகா வாங்கிக்கொண்டு வந்த லட்டுதான் விஷமாக மாறி இருக்கிறது என்பதை கோர்ட்டில் நீதிபதியிடம் வாதாடி பாக்யாவை இந்த கேசில் இருந்து விடுவிக்கிறான். அதன்பிறகு ஊடகங்களிலும் பாக்யாவின் மீது எந்த தப்பும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்