இருக்கிறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்ட கோபி.. கடைசியில இப்படி ஆயிடுச்சு

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் சற்றும் ரசிகர்கள் எதிர்பார்க்காத பல விஷயங்கள் அரங்கேறி வருகிறது. அதாவது இருக்கிறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்டால் அவனது நிலைமை என்னாகும் என்பது தான் தற்போது கோபியின் நிலைமை.

வீட்டில் மனைவி இருக்கும் போது தனது காதலியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு கோபி படாத பாடுபட்டு வருகிறார். காலையில் எழுந்தவுடன் காபி, சாப்பாடு என கோபியை விழுந்து விழுந்து கவனிபார் பாக்யா. ஆனால் தனக்கு ராதிகா தான் வேண்டும் என விடாப்பிடியாக 50 வயதுக்கு மேல் கோபி திருமணம் செய்து கொண்டார்.

Also Read :ஆசையை எல்லாம் குழி தோண்டி புதைத்த ராதிகா.. நடுரோட்டில் சர்க்கஸ் காட்டும் புது மாப்பிள்ளை

இந்நிலையில் ஜாகிங் சென்று வரும் கோபிக்கு வீட்டில் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது ராதிகா நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் கோபி கேட்க தயங்கிக் கொண்டே ராதிகாவிடம் காபி வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு பெரிதாக எந்த பதிலுமே சொல்லாமல் திரும்ப நியூஸ் பேப்பரை படித்துக் கொண்டிருக்கிறார்.

மீண்டும் கோபி வெட்கத்தை விட்டு காபி வேண்டும் என கேட்கிறார். அதற்கு ராதிகா கடையில் சென்று பால் வாங்கிட்டு வாருங்கள் என கூறுகிறார். என்னது பால் வாங்கிட்டு வரணுமா என கோபி அதிர்ச்சி அடைகிறார். அதன் பின்பு வேறு வழியில்லாமல் கடைக்கு சென்று பால் வாங்கி வரும் போது கோபியின் தந்தை வெளியில் போன் பேசிக்கொண்டு இருக்கிறார்.

Also Read :கிளைமேக்ஸை நோக்கி பாரதி கண்ணம்மா.. கடைசி நேரத்தில் எதிர்பாராத ட்விஸ்ட்

என்னடா உன் நிலைமை இவ்வளவு மோசம் ஆயிட்டே என போனில் உள்ளவரிடம் பேசுவது போல கோபியை கலாய்த்த தள்ளுகிறார். ஒரு வழியாக அப்பாவிடம் இருந்து எஸ்கேப் ஆகி கோபி வீட்டுக்கு வருகிறார். ராதிகா காலையில் சாப்பாட்டுக்கு உப்புமா செய்துள்ளார்.

புது மாப்பிள்ளை சோக்குக்கு பிரியாணி என கருவிருந்து போல சாப்பிடலாம் என்று நினைத்த கோபிக்கு தொடர்ந்து எல்லா விஷயங்களும் ஏமாற்றத்தை தந்து வருகிறது. இந்நிலையில் தினமும் ராதிகாவிடம் ஒவ்வொரு நாளையும் எப்படி கழிப்பது என்று தெரியாமல் திணறி வருகிறார் கோபி.

Also Read :அதல பாதாளத்திற்கு சென்ற பிக்பாஸ் டிஆர்பி.. போட்டியாளரிடம் கெஞ்சும் விஜய் டிவி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்