காதல் மோகத்தில் அடிக்க கையோங்கிய கோபி.. மொத்தமாக வச்சு செய்த ராதிகா

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இத்தொடரில் ராதிகா தற்போது கோபி வீட்டுக்கு கண்டிப்பாக செல்லவேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் கோபி ஏதாவது சொல்லி தட்டிககழித்து சொல்கிறார்.

இந்நிலையில் நாளை கண்டிப்பாக உங்கள் வீட்டுக்கு வருவேன் என கோபிக்கு ராதிகா வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். ராதிகா மட்டும் நம் வீட்டுக்கு வந்தால் நம்ம நிலைமை என்னவாகும் என உச்ச கட்ட பயத்தில் கோபி உள்ளார். இந்நிலையில் ராமமூர்த்திக்கு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு வர தொடங்கியுள்ளது.

முதலில் ஈஸ்வரி என்று தனது மனைவியின் பெயரை சொன்ன ராமமூர்த்தி தற்போது இனியாவின் பெயரையும் சொல்லி உள்ளார். அதை இனியா தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில் ராதிகாவிடம் இருந்து எப்படி தப்பிக்க வேண்டும் என்ற சிந்தனையில் வரும் கோபியிடம் இனியா தாத்தா என் பெயரைச் சொல்கிறார் வந்து பாருங்கள் என வற்புறுத்துகிறார்.

முதலில் மறுத்த கோபி தொடர்ந்து இனியா வற்புறுத்த அடிக்க கை ஓங்கிகிறார். உடனே இனியா அழுகிறாள், அவரது பாட்டி ஆறுதல் கூறுகிறார். இதனால் கொஞ்ச நாளாக கோபி சரியில்லை என்பது அவர் அம்மாவுக்கு தெரிய வருகிறது. மேலும் முதல் முறையாக தனது மகளை அடிக்க கை ஓங்கியவிட்டோமே என்ற வருத்தத்தில் கோபியும் இனியாவிடம் மன்னிப்பு கேட்கிறார்.

நம்ம வீட்டுல தான் இவ்வளவு பிரச்சினை, ராதிகா வீட்டுக்கு போவோம் என கிளம்பிய கோபிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அதாவது ராதிகா தன்னை உங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி கோபியை விடாப்பிடியாக வற்புறுத்துகிறார். தற்போது நீ இப்படி உறுதியாக இருக்க என்ன காரணம் என கோபி கேட்கிறார்.

ஒருத்தர் உங்கள பத்தி தப்பா சொன்னாங்க அதனால தான் உங்க குடும்பத்தை பார்க்கவேண்டும் என ராதிகா கூறுகிறார். ஆனால் கோபி இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இப்ப கூட்டிட்டு போறீங்களா, போக மாட்டீங்களா என்ன ராதிகா அதட்டி கேட்க உடனே முடியாது என கோபி கூறுகிறார். அப்பன்னா வீட்டை விட்டு போங்க என கோபிக்கு சரியான பதிலடி கொடுக்கிறார் ராதிகா. இவ்வாறு பல சுவாரசியமான கதைக்களத்துடன் பாக்யலட்சுமி வர இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்