ஈரமான ரோஜாவே – காதல் தோல்வியால் ஹீரோ எடுக்கும் விபரீத முடிவு

விஜய் டிவியில் புதிதாக துவங்கப்பட்ட ஈரமான ரோஜாவே2 சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருப்பதால், ரசிகர்களை வெகு சீக்கிரமாகவே கவர்ந்திருக்கிறது. இதில் காதலித்த ஒரு ஜோடியை திருமணம் நிச்சயமான மற்றொரு ஜோடியுடன் மாற்றி மாற்றி திருமணம் செய்து வைத்து அவர்களுடைய இக்கட்டான சூழ்நிலையை இந்த சீரியல் காண்பித்துக் கொண்டிருக்கிறது.

இதில் கதாநாயகனாக இருக்கும் ஜீவாவை, காவியா கதாபாத்திரத்தில் நடிக்கும் கேப்ரில்லா காதலிப்பார். ஆனால் ஜீவாவை காவியாவின் அக்கா பிரியாவிற்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.

எனவே காதலி படும் கஷ்டத்தையும் காதலியை ஒரே வீட்டில் தன்னுடைய அண்ணனுடைய மனைவியாக பார்ப்பதற்கு ஜீவாவால் முடியவில்லை. இதனால் அவர் குடித்துவிட்டு நடுராத்திரியில் வீட்டிற்கு வருகிறான்.

அவனுடைய மனைவி பிரியா, தள்ளாடும் கணவனை ரூமுக்கு அழைத்து செல்ல முயற்சிக்கிறாள். இருப்பினும் பிரியா செய்யும் உதவியை ஏற்றுக்கொள்ளாத ஜீவா அவனே தட்டுத்தடுமாறி பெட்ரூம்க்கு செல்கிறான்.

இப்படி குடிகாரனை தன் தலையில் கட்டி வைத்து விட்டார்களே என பிரியா ஒருபுறம் அழுது புலம்புகிறாள். இவ்வாறு ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாகவும் சுவாரசியம் குறையாமல் சென்று கொண்டிருக்கும் ஈரமான ரோஜாவே2 சீரியலில் ஒருகட்டத்தில் பிரியா-ஜீவா இருவரும் சந்தோசமாக தங்களுடைய வாழ்க்கையை துவங்க போகின்றனர்.

ஆனால் கேப்ரில்லா, தன்னுடைய கணவனை சுத்தமாக ஏற்றுக்கொள்ள முடியாமல் பிரியாவிற்கு வில்லியாக இனிவரும் நாட்களில் செயல்பட போகிறாள். ஆகையால் ஜீவாவைப் பிரியாவிற்கு விட்டுக்கொடுக்க முடியாமல் கேப்ரில்லா கதாபாத்திரம்தான் இந்த சீரியலுக்கு கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கப்போகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்