30 வயதுக்குள் மறைந்த 5 நடிகைகள்.. மிகக் கொடூரமா இறந்த விஜயகாந்தின் 2 ஹிட் ஹீரோயின்கள்

Five Tamil actresses who died before the age of 30: மக்களை மகிழ்விக்க வந்த கலைஞர்கள் கனவில் நினைத்திராத காலத்தின் கொடூரத்தால் திடீரென தனது வாழ்க்கையை முடித்து ரசிகர்களை ஏமாற்றி விட்டு சென்றனர்  உற்சாகத்துடன் நடித்த மங்கைகள், உளவியல் ரீதியான பிரச்சனையை எதிர்கொள்ள முடியாமல் உதிர்ந்து போன மலரின் வாசத்தை பேசும் பதிவு இது,

காமெடி நடிகை சோபனா: சின்னத்திரையில் மீண்டும் மீண்டும் சிரிப்பு என்ற நகைச்சுவை தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகை சோபனா. 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள ஷோபனா வடிவேலுவுடன் ஜில்லுனு ஒரு காதல், கார்த்தி உடன் சிறுத்தை போன்ற படங்களில் காமெடியில் கலக்கி இருந்தார். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொண்ட சோபனா 29 வயதிலேயே விபரீத முடிவுடன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

வைஷ்ணவி: சின்னத்திரையில் பிஸியாக இருந்து கொண்டே  தீனா, பாலா, 12 B போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை வைஷ்ணவி. வளர்ந்து வந்த இந்த இளம் நடிகையான இவர் உளவியல் ரீதியான பிரச்சனையை எதிர்கொள்ள முடியாமல் 21 வயதுடன் தன் வாழ்வை முடித்துக் கொண்டார். இவரது இறப்பின் பின்னணியில் சின்னத்திரை நடிகர் தேவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரத்து செய்யப்பட்டது.

Also read: 90’s இல் கவர்ச்சிக்காகவே வாய்ப்புகளை குவித்த 5 ஹீரோயின்ஸ்.. விஜய் கவுண்டமணி விட்ட ஜொள்ளால் வளர்ந்த நடிகைகள்

பிரத்யுக்ஷா: தமிழில் முரளி நடித்த மனுநீதி படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரத்யுக்ஷா. சவுண்ட் பார்ட்டி, விஜயகாந்த் உடன் தவசி போன்ற படங்களில் நடித்து பிரபலமாகி வந்த நிலையில் திடீரென ஒரு நாள் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக வந்த செய்தி அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுதியது. இவரது தாயார், 20 வயது நிறைந்த  தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும் தெலுங்கு நடிகர் மற்றும் அரசியல்வாதிகள் சிலரின் தொல்லைகளாலே அவளது மரணம் நிகழ்ந்தது என்று பரபரப்பை கிளப்பினார்.

சௌந்தர்யா: வசீகர தோற்றத்துடன் தமிழ்  கன்னடம் தெலுங்கு என பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்த சௌந்தர்யா, விஜயகாந்த் உடன் தவசி, சொக்கத்தங்கம் போன்ற படங்களிலும் நடித்திருந்தார். இவர் தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்திற்கு செல்லும் போது ஏற்பட்ட விமான விபத்தில் பலியானார்.

ஆர்த்தி அகர்வால்: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான ஆர்த்தி அகர்வால் பம்பரக் கண்ணாலே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். உடம்பை குறைக்க வேண்டுமென்று அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்தார்.  இதனால் ஏற்பட்ட பின் விளைவினால் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

Also read: ஓவர் நைட்டில் ஏஞ்சலினா ஜோலியாக மாறிய 5 நடிகைகள்.. சிம்ரனுக்கு டஃப் கொடுத்த 2 ஹீரோயின்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்