இனி இங்க நடிக்க மாட்டேன் என ஓடிய 5 ஹீரோயின்கள்.. அக்கட தேசத்தில் தாத்தா வயது நடிகருடன் ஜோடி போட்ட ஸ்ருதி

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானார். ஆனால் அவர்கள் சில காரணங்களால் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து மற்ற மொழி படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். அப்படிப்பட்ட ஐந்து நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

அசின்: தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகையாக அசின் வலம் வந்தார் . இவர் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கிறார்.  அப்படி இவர் நடித்த கஜினி, போக்கிரி, சிவகாசி, வரலாறு, தசாவதாரம், போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். பின்பு ஏஆர் முருகதாஸின் ஹிந்தி ரீமேக் ஆன கஜினி படத்தின் மூலம் பாலிவுட் சென்றார். அதன் பின் அங்கே சில படங்களில் நடித்தார்.  பிறகு  மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.

Also read: அசின், அனுஷ்காவை செஞ்சு விட்ட ஹரி.. ரகசியத்தை போட்டு உடைத்த பிரியா பவானி சங்கர்

அமலா பால்: தமிழ் சினிமாவில் அறிமுகமான சில வருடங்களிலேயே முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர் அமலா பால். இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி படமாகவும் அமைந்தது. பின்பு இவருடைய நடிப்பில் 2019 ஆம் ஆண்டு ஆடை திரைப்படம் வெளிவந்தது. ஆனால் இந்த படம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால் இனிமேல் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டு மற்ற மொழி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

ஸ்ருதிஹாசன்: தமிழ் சினிமாவின் வாரிசு நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் ஸ்ருதிஹாசன். இவர் முதலில் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் பிரபலம் ஆன பிறகு தான் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் நடித்த அனைத்து படங்களுமே முன்னணி ஹீரோக்களுடன் தான். பிறகு இவருக்கு ஏற்பட்ட காதல் தோல்வியால் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.  தற்போது தெலுங்கு படத்தில் நடிப்பதற்கு முக்கியத்துவம் செலுத்தி வருகிறார். ஆனால் தெலுங்கில் தாத்தா வயது நடிகருடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

Also read:  புலம்பித் தவிக்கும் ஸ்ருதிஹாசன்.. மருந்து கொடுத்து காப்பாற்றுவாரா கமலஹாசன்

அஞ்சலி: தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பரபரப்பாக நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்து வந்தவர் அஞ்சலி. இவர் நடிக்கும் படங்களில் பொதுவாகவே இவருடைய கதாபாத்திரம் சற்று வித்தியாசமாகவும், தைரியமான பெண்ணாகவும் நடித்திருப்பார். சில பிரச்சனை காரணமாக சினிமாவில் இருந்து விலகினார். அத்துடன் இவருடைய மார்க்கெட்டும் தமிழ் சினிமாவில் குறைந்துவிட்டது. இதனால் கடந்த வருடமாகவே தமிழ் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு மற்ற மொழி படங்களில் நடித்து வருகிறார்.

சாய் பல்லவி: 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. இவர் நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் மலையாளத்தையும் தாண்டி தமிழ் ரசிகர்களையும் மிக கவர்ந்தது. இவர் தமிழில் தனுஷின் மாரி 2 படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவருடைய நடனத்திற்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. ஆனாலும் இவர் தமிழ் படங்களில் நடிக்காமல் தெலுங்கு படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

Also read: சாய் பல்லவியின் கார்கி ரசிகர்களை கவர்ந்ததா? கார்கி விமர்சனம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்