கண்டவனெல்லாம் உன் பொண்டாட்டிக்கு வேலை ஏவினால் சும்மா இருப்பியா.. கொந்தளித்த வெண்பா!

விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் கதாநாயகன் கதாநாயகியை விட அதிகம் பேசப்படும் கதாபாத்திரம் வெண்பா. இதில் நடிகை பரினா தன்னுடைய அட்டகாசமான நடிப்பை வெளிக் காட்டுகிறார். இதனால் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் இருக்கிறது.

அத்துடன் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பரினா, அவ்வபோது ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து அவர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அதாவது குல்லா, பர்தா, புர்கா அணிந்து வருவதற்கு எதிராக போராட்டம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டு பிரச்சினை பெரிதாகிக் கொண்டிருக்கிறது. முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராக இந்த மாணவர்கள் பதிலுக்கு காவித் துப்பட்டா அணிந்தும், காவி துண்டை தலையில் கட்டிக்கொண்டு கல்லூரியின் வாசலில் போராட்டம் நடத்துகின்றனர்.

இவ்வாறு கடந்த சில நாட்களாகவே முஸ்லீம் மற்றும் இந்து சமூகத்தினருக்கு இடையே மத ரீதியான பிரச்சினை நிலவி கொண்டிருக்கிறது, இதுகுறித்து பரினாவிடம் ரசிகர் ஒருவர், ‘இந்தப்  பிரச்சினைக்கு ஏதாவது தீர்வு சொல்லுங்கள்’ என்று கேட்டு அவருடைய வாயைப் பிடுங்கி உள்ளனர்.

அதற்கு பரினாவும், ‘ஹிஜாப் அணிவது, பொட்டு வைப்பது போன்றவையெல்லாம் அவரவர் தனிப்பட்ட விருப்பம். மற்றவர்கள் யாராவது உங்களது வீட்டிற்கு வந்து உங்களுடைய மனைவியிடம் வேலை ஏவினால் சும்மா இருப்பீங்களா!’ என்று கொந்தளிக்கிறார்.

இவ்வாறு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பரினா, ஹிஜா பிரச்சனை குறித்து பேசுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இவர் மட்டுமல்ல சமூக வலைதளங்கள் பலரும் இந்தப் பிரச்சனையை குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்