ஒரு ஏசியை வைத்து 300 எபிசோட் ஓட்டும் ஆல்யா.. ராஜா ராணி-2 மரண கலாய்

விஜய் டிவியில் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வரும் சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியல் ஆரம்பத்தில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சீரியல். ஆனால் போகப்போக இந்த சீரியல் ரசிகர்களுக்கு சலிப்பை கொடுத்து வருகிறது.

ஒரு சீனை வைத்தே பல நாட்கள் ஓட்டி வரும் இயக்குனரை சமூக வலைத்தளங்களில் பலரும் கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற இந்த சீரியல் தமிழில் என் கணவன் என் தோழன் எனும் பெயரில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஆனால் விஜய் டிவி அந்த சீரியலை முழுமையாக முடிக்காமல் பாதியிலேயே நிறுத்திவிட்டது. தற்போது அதை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து ராஜா ராணி 2 என்ற பெயரில் ஒளிபரப்பி வருகிறது. இதை ஹிந்தி சீரியல் அளவுக்கு எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த சீரியல் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

இதில் ஹீரோ ஹீரோயின் இருவரும் பார்ப்பது, நடப்பது என்று ஒவ்வொரு சீனையும் ஒவ்வொரு வாரம் ஒளிபரப்பி வருகின்றனர். அந்த வரிசையில் இப்போது சரவணன், சந்தியா இருவரும் சமையல் போட்டிக்காக சென்னை வந்துள்ளனர்.

அங்கு அவர்களுக்கு பெரிய ஹோட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற இடங்களை பார்த்திராத சரவணன் அதை கண்டு ஆச்சரியத்தில் உள்ளார். மேலும் ஏசி ரூமில் தங்கி பழக்கமில்லாத சரவணன் அங்கு தூங்குவதற்கு சிரமப்படுகிறார்.

இதனால் ஹீரோயின் சந்தியா யாருக்கும் தெரியாத ஒரு வித்தையை கற்றுக் கொடுக்கிறார். அதாவது தன் இரண்டு கைகளையும் வைத்து அவரின் கன்னத்தில் வைத்து வைத்து எடுக்கிறார். இப்பொழுது உங்களுக்கு குளிராது என்றும் சொல்கிறார்.

இந்தக் காட்சி தற்போது இணையதளத்தில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி உள்ளது. ஒரு ஏசியை வைத்தே 300 எபிசோடு ஓட்டு வாங்க போல என்று ரசிகர்கள் இந்த சீரியலை கழுவி ஊற்றி வருகின்றனர்.

இதேபோன்று கடந்த வாரம் இருவரும் ஜூஸ் குடிக்கும் காட்சியை வைத்து அந்த வாரம் முழுவதும் ஓட்டினார்கள். கதை கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு எண்டு கார்டு போடலாமே பாஸ்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்