அதிர்ச்சியை கிளப்பிய ட்வீட்.. சோகத்தின் முழு வடிவாய் செல்வராகவன்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான காதல் கதைகளை கொண்ட படங்களை எடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் செல்வராகவன். இவர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் போன்ற வித்தியாசமான கதைகளால் வெற்றி கண்டவர்.

செல்வராகவன் தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ராக்கி பட இயக்குனரின் சாணி காகிதம் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். செல்வராகவன் ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். சமீபகாலமாக ரசிகர்களுக்கு அறிவுரை கூறுவது போல் பதிவிட்டு வருகிறார்.

சமீபத்தில், வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் நான்தான் காரணம் என்று பழி போட்டுக் கொள்ளாதீர்கள். மற்றவர்கள் பாவத்தை நாம் சுமந்தது போதும் என செல்வராகவன் பதிவிட்டு இருந்தார். இதனால் பல கேள்விகள் எழுந்தது.

selvaraghavan
selvaraghavan

இந்நிலையில் தற்போது செல்வராகவன், ஒரு இடத்தில் உங்களை மதிக்கவில்லையா , அமைதியாய் புன்னகைத்து விட்டு அங்கிருந்து வெளியேறிவிடுங்கள். அவமானத்தை சகித்துக் கொண்டு உண்ணும் விருந்தை விட மானத்துடன் உண்ணும் பழையது அமிர்தம் என்று பதிவிட்டிருந்தார்.

செல்வராகவன் ட்விட்டரில் போட்டிருக்கும் இந்த பதிவு ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் செல்வராகவன் பெரிய பிரச்சினையில் உள்ளாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்