யாராவது ஒருத்தர் டைவர்ஸ் கொடுத்து சீரியல முடிங்கடா.. நின்னு பேசியே கழுத்திருக்கும் பாக்கியா

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த 2 வாரங்களாக வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கும் கோபியை பாக்யா வெளுத்து வாங்குவது போன்ற ஒரே காட்சியை திரும்பத் திரும்ப காட்டுவதால் சின்னத்திரை ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.

கோபியின் தகாத உறவு தெரிந்ததும் வீட்டை விட்டு வெளியேறிய பாக்யா சமாதானமாகி வீட்டிற்கு வந்திருக்கிறார் என சிலர் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர் கோபிக்கு விவாகரத்துக் கொடுப்பதற்காகவே வந்திருக்கிறார்.

அப்போதுகூட பாக்யா கோபியை அனைவரின் முன்னிலையிலும் நிற்க வைத்து கேள்வி கேட்டு அசிங்கப் படுத்துகிறார். ‘உங்களுக்கு தொந்தரவாக கஷ்டங்களை கொடுத்துக்கொண்டு இவ்வளவு நாள் பிடிக்காத மனைவியாய் வாழ்ந்ததை நினைத்தாலே அசிங்கமாக இருக்கிறது.

எனக்குத் தெரியாமல் என்னிடம் இருந்து விவாகரத்து பெற நினைத்த உங்களுக்கு நானே முன்வந்து விவாகரத்து தருகிறேன். நீதிமன்றத்திற்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று பாக்யா கோபியை மளிகை கடைக்கு அழைப்பது போல் விவாகரத்து பெறுவதற்காக நீதிமன்றம் அழைக்கிறார்.

இதையெல்லாம் பார்த்து கதிகலங்கி நிற்கும் குடும்பம், எப்படியாவது பாக்யாவை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வா என கோபியிடம் சொல்ல, உடனே கோபி ‘எனக்கே டைவர்ஸ் தருகிறேன் என தெனாவெட்டாக பேசிய பாக்யாவிற்கு நான் விவாகரத்து கொடுக்கத்தான் போகிறேன்’ என்று கோபியும் திமிரு காட்டுகிறார்.

என்னதான் இந்த சீரியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்தாலும் கடந்த இரண்டு வாரங்களாக பாக்யா பக்கம் பக்கமாக டயலாக் பேசுவதால் சிலர் எரிச்சல் அடைந்துள்ளனர். இப்படிப் 10 நாட்களாக ஒரே இடத்தில் நின்றுகொண்டு நீண்ட வசனம் பேசும் பாக்யாவை கோபி விவாகரத்து செய்தது சரியான முடிவுதான்.

பேசியே மொக்கை போட்டு கழுத்திருக்கும் பாக்யாவிற்கு இந்த வருடம் சிறந்த சின்னத்திரை நடிகைக்கான விருதை கொடுப்பதைவிட, வாழ்நாள் சாதனையாளர் விருது தரவேண்டும் என நெட்டிசன்கள் கிண்டல் அடிக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்