நான் பைத்தியமா? குடிகாரியா? பயில்வானை போனில் அசிங்கப்படுத்திய பாடகி

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் எம்ஜிஆர் காலத்திலிருந்தே சினிமாவில் நடிக்க வருகிறார். இதனால் அந்த காலம் முதல் இந்த காலம் வரை உள்ள நடிகர், நடிகைகளை பற்றி பயில்வானுக்கு ஓரளவு தெரியும். மேலும் சில காலம் பத்திரிகையாளராகவும் பயில்வான் பணியாற்றியுள்ளார்.

இதெல்லாம் வைத்த தற்போது ஒரு யூடியூப் சேனல் தொடங்கி அதில் சினிமாவில் உள்ள நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பேசி வருகிறார். இதனால் இவருடைய யூடியூப் சேனலை லட்சக்கணக்கான பேர் பார்க்கின்றனர். மேலும் இதன் மூலம் நிறைய பணமும் சம்பாதிக்கிறார்.

இதற்கு திரைப்பிரபலங்கள் இடையே கடுமையான எதிர்ப்பு நிலவினாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பயில்வான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் பின்னணிப் பாடகி சுசித்ராவை பற்றி பயில்வான் ஒரு வீடியோ போட்டுள்ளார்.

அதைப்பார்த்து கொந்தளித்த சுசித்ரா பையனுக்கு போன் போட்ட கண்டபடி விளாசியுள்ளார். அந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் சுசித்ரா, என்னை பைத்தியம், போதைக்கு அடிமை, யார் கேட்டாலும் பண்ணுவேன் என கூறுகிறீர்களே இதற்கு உங்களிடம் ஆதாரம் உள்ளதா எனப் பயில்வானிடம் கேட்டார்.

அதற்க பயில்வான், எழுதிக் கொடுத்ததை தான் நான் சொன்னேன் என சமாளித்தார். ஆனால் சுசித்ரா விடாப்பிடியாக எப்படி உங்களுக்கு தெரியாத விஷயத்தை இப்படி பரப்பாதீர்கள், யார் உங்களுக்கு பணம் கொடுத்தா, எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என கேட்டார்.

மேலும், நடிகைகளைப் பற்றி தொடர்ந்து அவதூறு பேசி வரும் உங்களை கண்டிப்பாக கைது செய்ய வேண்டும், அதுவே என் நிலைப்பாடு, நான் உங்களுக்கு என்ன பாவம் செஞ்சேன், நாக்குல நரம்பு இல்லாம இப்படி பேசுறீங்க, எல்லாத்தையும் நீதிமன்றத்தில் வந்த கூறுங்கள் என சுசித்ரா தரமான கேள்விகளைக் கேட்டுள்ளார். இந்த ஆடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்