பெரிய படங்களால் கிடப்பில் கிடக்கும் 4 மாஸ் படங்கள்.. சிம்பு படத்தை நம்பி இருக்கும் வாரிசு நடிகர்

திரையுலகில் தற்போது வாரிசு நடிகர்களின் வரவு அதிகமாகிவிட்டது. ஒரு காலத்தில் ஹீரோவாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகர்களின் வாரிசுகள் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்கியிருக்கிறார்கள்.

அப்படி சினிமாவுக்கு வந்த வாரிசுகள் அவர்களின் அப்பாவை போல் பிரபலமாகவும், வெற்றிப் படங்களையும் கொடுத்திருக்கிறார்கள் என்று கேட்டால் அது சந்தேகம்தான். அப்படி ஒரு வாரிசு நடிகராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் கௌதம் கார்த்திக்.

நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான இவர் ஆரம்ப காலத்தில் பல படங்களில் நடித்து ஓரளவுக்கு வெற்றி நாயகனாக இருந்தார். ஆனால் இடையில் அவர் எந்த திரைப்படங்களிலும் கமிட் ஆகாமல் இருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு இவரின் நடிப்பில் ஆனந்தம் விளையாடும் வீடு படம் வெளியானது.

ஆனால் அந்தப் படம் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியாக அமையவில்லை. அதைத் தொடர்ந்து அவர் தற்போது யுத்த சத்தம், பத்து தலை போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த திரைப்படங்கள் விரைவில் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

இந்நிலையில் அவர் பல வருடங்களுக்கு முன்பே நடித்து முடித்த சிப்பாய் இன்னும் வெளியாகாமல் அப்படியே இருக்கிறது. அதேபோல் அவர் செல்லப்பிள்ளை என்ற திரைப்படத்திலும் நடித்தார். ஆனால் அந்த படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

தற்போது அவரின் பழைய படங்களை எல்லாம் தூசி தட்டி ரிலீஸ் செய்வதற்கு இயக்குனர்கள் தயாராகி வருகின்றனர். ஆனால் இந்த மாதத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படங்கள் அனைத்தும் ரிலீஸ் ஆவதால் கௌதம் கார்த்திக்கின் படங்கள் தற்போது ரிலீஸ் ஆவதற்கு வாய்ப்பு இல்லை.

இதனால் பாவம் மனுஷன் நடித்த படங்கள் ஒன்றும் வெளியாகவில்லையே என்று நொந்து போயிருக்கிறாராம். மேலும் அவர் தற்போது சிம்புவுடன் இணைந்து நடித்து வரும் பத்து தல திரைப்படத்தை தான் மலைபோல நம்பி இருக்கிறார்.

ஆனால் அந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியாமல் இருக்கிறது. கூடிய விரைவில் அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெளியாக வேண்டும் என்று வேண்டுதல் வைக்காத குறையாக காத்திருக்கிறாராம் கௌதம் கார்த்திக்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்