லோகேஷுக்கு போட்டியாக வரும் இயக்குனர்.. அதே ஐடியாவை கையிலெடுக்கும் முரட்டு நடிகர்

லோகேஷ் கனகராஜ் விக்ரம் பட வெற்றியால் எங்கேயோ போய்விட்டார். பாலிவுட் இயக்குனர்கள் எல்லாம் இவரிடம் கதையை கேட்க ரொம்ப ஆர்வமாக இருக்கின்றனர். இந்நிலையில் முதல் படமே சூப்பர்ஹிட் படமாக கொடுத்த இயக்குனர் ஒருவர் லோகேஷ் கனகராஜ் ஐடியாவை பின்பற்றி வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் முதல் படம் மாநகரம் எடுத்தார். அதன்பின் இரண்டாவது படமாக கார்த்தியை வைத்து கைதி எடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன்பின் அவருக்கு எல்லாமே ஏறுமுகம்தான். அதைப்போலவே இந்த ஆண்டு இயக்குனர் தமிழ் இயக்கத்தின் விக்ரம் பிரபுவை வைத்து சூப்பர் ஹிட் படமான டானாக்காரன்.

இந்தப்படத்தில் இயக்குனர் தமிழ், போலீஸ் ஆக வேண்டும் என்றால் என்னென்ன பிரச்சனைகளை ட்ரெய்னிங்கில் சந்திக்க நேரிடும் என்பதை வெளிப்படையாகப் பேசி காவலர் பயிற்சிப் பள்ளியில் நடக்கும் அவலங்களை தோலுரித்தல் காட்டியிருப்பார். இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் தமிழின் அடுத்த படத்தை குறித்து ரசிகர்கள் ஆர்வத்துடன் தெரிந்துகொள்ள காத்திருக்கின்றனர்.

இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களுக்கு நடிகராகவும் சூர்யா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான ஜெய் பீம் படத்தில் போலீஸ்காரராக வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார். இப்படி இயக்குனராவதற்கு முன்பே நடிகராகவும் தன்னை ஒத்திகை பார்த்திருக்கிறார்.

தற்போது இயக்குனர் தமிழ் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் குறித்த அப்டேட் வெளிவந்துள்ளது. அந்தப்படத்தில் நடிகர் கார்த்தி தான் கதாநாயகனாக நடிக்க போகிறார். ஏற்கனவே இவர் எடுத்த டானாக்காரன் படத்தின் பட்ஜெட் வெறும் 10 கோடி தான். இப்பொழுது இவர் கார்த்தியை வைத்து 40 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுக்கவிருக்கிறார்.

இரண்டாவது படமே பெரிய பட்ஜெட்டை கையிலெடுத்திருக்கிறார். தற்போது தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருப்பதால் வெற்றி இயக்குனராக பார்க்கப்படும் லோகேஷ் கனகராஜ் ‘மாநகரம்’ படத்தை தொடர்ந்து கார்த்தியை வைத்து தான் 2-வது படத்தை எடுத்தார். அவரைப் போன்றே தற்போது இயக்குனர் தமிழ் தன்னுடைய பெரிய பட்ஜெட் படமான 2-வது படத்தை கார்த்தியை வைத்து லோகேஷ்க்கு கிடைத்த வெற்றி தனக்கும் கிடைக்கும் என்ற எண்ணத்தில் அப்படியே பின்பற்றி வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்