Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
இரவானால் பாட்டிலும் கையுமாக சுற்றும் பிரபல தொகுப்பாளினி.. கூடவே ஆண் நண்பர்கள் வேறயாம்
சினிமாவை பொருத்தவரை எப்படியோ ஆனால் தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரை இந்த தொகுப்பாளினி தான் பிரபலம். சினிமாவில் உள்ள அத்தனை பெரிய நடிகர்களிடம் நட்பு ரீதியாக பழக்கத்தில் உள்ளவர். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் அதன் பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அடுத்த ஒரு வருடத்திலேயே டைவர்ஸ் வாங்கி கொண்டு வந்து விட்டார். அந்த நபரோ ஏறாத படியில்லை, பேட்டி கொடுக்காத தொலைக்காட்சியே இல்லை. தொகுப்பாளினியின் இரவு பார்ட்டிகளைப் பற்றியும், ஆண் நண்பர்கள் சாவகாசம் பற்றியும் புட்டு புட்டு வைத்தார்.
ஆனால் அதையெல்லாம் அவரது ரசிகர்கள் யாரும் நம்புவதாக இல்லை. அதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு தமிழ், தெலுங்கு என அனைத்து நடிகர்களுடனும் இரவானால் ஏதோ ஒரு ஆண் நண்பருடன் தினமும் மது உட்கொள்வதை வழக்கமாகவே மாற்றி விட்டாராம்.
அந்த தொகுப்பாளினிக்கு தற்போது வரை எந்த மவுசு குறையவில்லை. அதிக சம்பளம் வாங்கும் தொகுப்பாளினியாக தற்போதுவரை திகழ்ந்து வருகிறார். டிவியில் நல்லவர் போல் நடித்தாலும் வெளியில் அப்படி இல்லையாம். வரவர தொகுப்பாளினியின் நடவடிக்கைகள் சுத்த மோசமாக இருக்கிறதாம்.
தினமும் ஒரு ஆண் நண்பருடன் கூத்தடித்து கொண்டிருப்பவரை அவரது வீட்டிலும் கண்டு கொள்வதாக இல்லை. நிறைய பணம் சம்பாதிப்பதால் அவர்களும் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டிய நிலைமை ஆகிவிட்டது. திருமணம் மட்டும் செய்து கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம் அந்த தொகுப்பாளினி. மத்தபடி பாய் பெஸ்டீஸ்களுடன் ஜாலியாக சுற்றி வருகிறாராம்.
பாவம் இவரை நம்பி திருமணம் செய்தவர் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு சுற்ற வேண்டிய நிலைமை ஆகிவிட்டது என்கிறது கோலிவுட் வட்டாரம்.
