நயன்தாரா உட்பட சினிமாக்காரர்களை கேவலமாக பேசிய 5 பிரபலங்கள்.. இவங்களுக்கு இதுதான் வேலையே!

பொதுவாக சினிமாவில் நடிக்கும் நடிகர்களுக்கு திரைப்படங்கள் தொடர்பாக பல போட்டிகள் இருக்கும். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் அனைவரும் நட்புடன் பழகுவார்கள். அதிலும் ஒரு நடிகருக்கு ஏதாவது பிரச்சினை என்றால் சக நடிகர்கள் இணைந்து ஆதரவு தெரிவிப்பார்கள்.

ஆனால் ஒரு சிலர் சினிமாவில் நடித்துக் கொண்டே சக சினிமாக்காரர்களை ஏக வசனத்தில் பேசிய சம்பவங்களும் நடந்ததுண்டு. அப்படி சினிமாக்காரர்களை தன் பேச்சால் வெளுத்து வாங்கிய ஐந்து நடிகர்களை பற்றி காண்போம்.

எம் ஆர் ராதா இவர் மனதில் பட்டதை தைரியமாக பளிச்சென்று பேசக்கூடியவர். அதற்காக எவ்வளவு பிரச்சனை வந்தாலும் சமாளிக்கக்கூடிய திறமையும் அவருக்கு இருந்தது. மேடை நாடக கலைஞராக இருந்து சினிமாவுக்கு வந்த இவர் ரத்தக்கண்ணீர் உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த திரைப்படங்களில் எல்லாம் சக நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் உடன் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும். மேலும் அவர் மக்களிடம் சினிமாக்காரர்களை நம்பாதீர்கள், நாங்கள் அனைவரும் காசுக்காக நடிப்பவர்கள் என்று வெளிப்படையாக கூறுவார். இதையெல்லாம் தாண்டி நடிகர் எம் ஜி ஆரை துப்பாக்கியால் சுட்டு திரை உலகையே அதிர வைத்தவர். இதற்காக அவர் சிறை தண்டனையும் பெற்றார்.

சோ சோ ராமசாமி என்று அழைக்கப்படும் இவர் பத்திரிக்கையாளர், விமர்சகர், நடிகர், எழுத்தாளர் போன்ற பல திறமைகளைக் கொண்டவர். பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த இவர் பின்னாளில் துக்ளக் என்ற பத்திரிகையை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வந்தார்.

அந்த பத்திரிக்கையில் அவர் முழுக்க முழுக்க சினிமாக்காரர்கள் பற்றியும் அரசியல்வாதிகளைப் பற்றியும் நேரடியாக தாக்கி எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார். அவருடைய மேடை பேச்சுக்கு பல ரசிகர்கள் இருந்தனர். இவர் பேச ஆரம்பித்தாலே அரசியல் மற்றும் சினிமா குறித்த நக்கலும் நையாண்டியும் கட்டாயம் இருக்கும். மேலும் அவருடைய பத்திரிக்கையில் வரும் அரசியல் சார்ந்த ஒவ்வொரு விமர்சனமும் மாநில தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை உன்னிப்பாக கவனிக்க வைத்தது.

ராதாரவி நடிகவேள் எம் ஆர் ராதாவின் மகனான இவர் தன் தந்தையைப் போலவே மனதில் பட்டதை தைரியமாக பேசக்கூடியவர். இதற்காக அவருக்கு பல எதிர்ப்புகளும் கிடைக்கும். ஆனால் அவர் அதைப் பற்றி எல்லாம் கண்டு கொள்வதில்லை.

அவர் ஒருமுறை மேடையில் நடிகை நயன்தாராவை பற்றி மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை உபயோகித்து பேசினார். அதாவது நயன்தாரா சீதா தேவியாக ஒரு திரைப்படத்தில் நடித்தார். அதை குறிப்பிட்டு பேசிய ராதாரவி, சாமி வேடத்தில் இப்பொழுது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்ற நிலைமை வந்து விட்டது.

பார்த்தவுடன் கையெடுத்து கும்பிடுபவர்களையும் சாமியாக நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடுகிறவர்களையும் சாமியாக நடிக்க வைக்கலாம் என்று மோசமாக பேசினார். இது திரையுலகை மட்டுமல்லாது, நயன்தாராவின் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது. பின்னர் அவர் அந்தப் பேச்சை ஒருவாறு சமாளித்து மூடி மறைத்து விட்டார்.

பயில்வான் ரங்கநாதன் பத்திரிக்கையாளர் என்ற பெயரில் சக நடிகர்களை பற்றி மிகவும் கேவலமான வார்த்தைகளால் விமர்சிப்பதில் இவருக்கு நிகர் இவர்தான். அதிலும் நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் போட்டு உடைப்பது இவருக்கு கைவந்த கலை.

சினிமா துறையில் ஏதாவது ஒரு சர்ச்சையான விஷயம் கிளம்பினால் உடனே அதற்கான காரணம் இதுதான் என்று பேட்டி கொடுக்க ஆரம்பித்து விடுவார். சினிமாவில் இவர் விமர்சிக்க ஆட்களே கிடையாது. அதிலும் நடிகைகள் பலரை பற்றியும் இவர் தரக்குறைவாக பேசியது பலரின் எதிர்ப்புக்கு ஆளானது. ஆனாலும் அவர் தொடர்ந்து இது போன்று பொதுவெளியில் வில்லங்கமாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தயாரிப்பாளர் ராஜன் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை தயாரித்த இவர் தற்போது சினிமாக்காரர்களை பற்றி விமர்சனம் கூறுவதில் பிஸியாக இருக்கிறார். இவர் பார்வையில் தப்பு என்று பட்டால் அதை வெளிப்படையாக கூற கூடியவர்.

தற்போது இருக்கும் தமிழ் சினிமாவைப் பற்றியும் முன்னணி நடிகர்கள் பலரைப் பற்றியும் இவர் பல விமர்சனங்களை வைப்பதுண்டு. அதிலும் சில நாட்களுக்கு முன்பு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து விஷயத்தில் இவர் பகிரங்கமாக தன் கருத்தை முன் வைத்தார். மேலும் த்ரிஷா, அஞ்சலி போன்ற நடிகைகளை பற்றி பேசி அனைவரையும் அதிர வைத்தார்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்