Tamil Cinema News | சினிமா செய்திகள்
அட்லீயிடம் பணத்தை திரும்ப கேட்ட ஏஜிஎஸ்? பொய் தகவலா?
தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வசூலை பெற்ற திரைப்படம் பிகில். இதற்காக அட்லீ சுமார் 15 கோடி வரை சம்பளம் பேசப்பட்டது அனைவரும் அறிந்ததே. படத்தின் தயாரிப்பு 180 கோடி என ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அர்ச்சனா கல்பாத்தி கூறியிருந்தார்.
ஆனால் படத் தயாரிப்பின்போது சொன்ன பட்ஜெட்டை விட இருபது, முப்பது கோடி வரை அதிகமானதாக தெரிகிறது. இதனால் அப்போதே தயாரிப்பு தரப்பு அட்லி மீது கோபம் ஆக இருந்ததாக செய்திகள் வெளிவந்தன. படமும் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது.
தயாரிப்பாளர்கள் முதல் வினியோகஸ்தர்கள் வரை அனைவருமே நல்ல லாபம் பார்த்தனர். இருந்தும் நெட்டிசன்களில் சிலர் பிகில் படம் நஷ்டம் அடைந்துவிட்டதாக செய்திகள் பரப்பி வருகின்றனர். தற்போது அட்லீக்கு, ஏஜிஎஸ் நிறுவனம் கொடுத்த சம்பளத்தில் சுமார் 3 கோடி வரை திரும்ப கேட்பதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
சொன்ன பட்ஜெட்டை விட அதிகமாக செலவழித்தாலும், மேலும் சில காரணங்களாலும் அட்லீயிடம் பணத்தை திரும்பக் கேட்டு உள்ளனர் என வெளியான வதந்தி தற்போது காட்டு தீ போல் பரவி வருகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் அது உண்மை இல்லை என்று கூறி வருகின்றனர்.
சொல்லப்போனால் தமிழ் சினிமா இயக்குனர்களில் தற்போது ஷங்கர், முருகதாஸ்க்கு பிறகு அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனர் பட்டியலில் அட்லீ உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கமர்சியல் படங்களை சிறப்பாக கையாளத் தெரிந்தவர் எனவும் பெயர் பெற்றிருக்கிறார் அட்லீ.
விரைவில் அட்லீ, விஜய் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
